Roman script

Singers : G. V. Prakash Kumar and Saindhavi

Music by : G. V. Prakash Kumar

Male Part

Yen indha paarvaigal

Yen intha mounangal

Nenjukull kaatrinmai undakutho

Male Part

Yen indha vaarthaigal

Yen indha vaasanai

Nenjukkull pei puyal undakutho

Female Part

Kaadhugal moodum podhinilum

Moolaikul odum paadal ondraai

Ullathai moodi vaithirunthen

Nee mattum eppadi ullae sendraai

Male Part

En noolum nee aanaai

En vaanam nee aanaai

Kaatraadi aanen adi

Aanen adi

Male Part

Yen indha paarvaigal

Yen intha mounangal

Nenjukull kaatrinmai undakutho

Female Part

Vannam maaradha oviyamaai

Ennai aangaangae kaatugiraai

Eeram kaindhaalum bathiramaai

En bimbam yaavum pootugiraai

Male Part

Pinnae odidum kaatchiyellaam

Minnal vegathil maatrugiraai

Kannukull ennai ulliluthu

En vaazhvai pulli aakugiraai

Male Part

Ennai naan kaakka

Varainthiruntha

Maaya kodondrai neekkugiraai

Ithu mei endro poi endro

Yosikkum mun enthan

Aiyaththai pokkugiraai pokkugiraai

Male Part

Thevai illaatha vetkam ellaam

Neram paarkaamal kollugiren

Naan orr aan endra unmai kandu

Angae ennai naan killugiren

Male Part

Kaadhal natpukku mathiyilae

Nenjam pendulum aadumadi

Thottum theendaamal pesaiyilae

Vinaadi nindru odumadi

Female Part

Innum oriru nodigalilae

Mutham nan vaikka koodumada

Ohho en enna kuttaikkul

Un bimbam vaazhathaan

Kal ondrai pottaaiyada

Female Part

Yen indha paarvaigal

Yen intha mounangal

Nenjukull kaatrinmai undakutho

Female Part

Yen indha vaarthaigal

Yen indha vaasanai

Nenjukkull pei puyal undakutho

Female Part

Kaadhugal moodum podhinilum

Moolaikul odum paadal ondraai

Male & Female : Ullathai moodi vaithirunthen

Nee mattum eppadi ullae sendraai

Male & Female : En noolum nee aanaai

En vaanam nee aanaai

Kaatraadi aanen adi (aanen ada)

தமிழ்

பாடகர்கள் : ஜி. வி. பிரகாஷ் குமார் மற்றும் சைந்தவி

இசையமைப்பாளர் : ஜி. வி. பிரகாஷ் குமார்

ஆண் : ஏன் இந்த பார்வைகள்

ஏன் இந்த மௌனங்கள்

நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ

ஆண் : ஏன் இந்த வார்த்தைகள்

ஏன் இந்த வாசனை

நெஞ்சுக்குள் பேய் புயல் உண்டாக்குதோ

பெண் : காதுகள் மூடும் போதினிலும்

மூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றாய்

உள்ளத்தை மூடி வைத்திருந்தேன்

நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்

ஆண் : என் நூலும் நீ ஆனாய்

என் வானம் நீ ஆனாய்

காற்றாடி ஆனேனடி

ஆண் : ஏன் இந்த பார்வைகள்

ஏன் இந்த மௌனங்கள்

நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ

பெண் : வண்ணம் மாறாத ஓவியமாய்

என்னை ஆங்காங்கே காட்டுகிறாய்

ஈரம் காய்ந்தாலும் பத்திரமாய்

என் பிம்பம் யாவும் பூட்டுகிறாய்

ஆண் : பின்னே ஓடிடும் காட்சியெல்லாம்

மின்னல் வேகத்தில் மாற்றுகிறாய்

கண்ணுக்குள் என்னை உள்ளிழுத்து

என் வாழ்வை புள்ளி ஆக்குகிறாய்

ஆண் : என்னை நான் காக்க வரைந்திருந்த

மாய கோடொன்றை நீக்குகிறாய்

இது மெய்யென்றோ பொய்யென்றோ

யோசிக்கும் முன் எந்தன்

ஐயத்தை போக்குகிறாய்

ஆண் : தேவை இல்லாத வெட்கமெல்லாம்

நேரம் பார்க்காமல் கொள்ளுகிறேன்

நான் ஓர் ஆண் என்று உண்மை கண்டு

அங்கே என்னை நான் கிள்ளுகிறேன்

ஆண் : காதல் நட்புக்கு மத்தியிலே

நெஞ்சம் பெண்டூலம் ஆகுமடி

தொட்டும் தீண்டாமல் பேசயிலே

வினாடி நின்று ஓடுமடி

பெண் : இன்னும் ஓரிரு நொடிகளிலே

முத்தம் நான் வைக்க கூடுமடா

ஓஹ்ஹோ என்னென்ன குட்டைக்குள்

உன் பிம்பம் ஆடத்தான்

கல் ஒன்றை போட்டாய்யடா

பெண் : ஏன் இந்த பார்வைகள்

ஏன் இந்த மௌனங்கள்

நெஞ்சுக்குள் காற்றின்மை உண்டாக்குதோ

பெண் : ஏன் இந்த வார்த்தைகள்

ஏன் இந்த வாசனை

நெஞ்சுக்குள் பேய் புயல் உண்டாக்குதோ

பெண் : காதுகள் மூடும் போதினிலும்

மூளைக்குள் ஓடும் பாடல் ஒன்றாய்

ஆண் மற்றும் பெண் :

உள்ளத்தை மூடி வைத்திருந்தேன்

நீ மட்டும் எப்படி உள்ளே சென்றாய்

ஆண் மற்றும் பெண் :

என் நூலும் நீ ஆனாய்

என் வானம் நீ ஆனாய்

காற்றாடி ஆனேன(டி)டா

Song information

Singers: G. V. Prakash Kumar and Saindhavi

Music by: G. V. Prakash Kumar

Release information: From Rajathandhiram (2015) · Lyricist: Madhan Karky

Explore this song