Roman script
Singer : T. M. Soundararajan Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part Yaar enna sonnaar yaenintha kobam Yaar enna sonnaar yaenintha kobam Nee konda mounam naan seitha paavam Yaar enna sonnaar yaenintha kobam Nee konda mounam naan seitha paavam Male Part Thaer munbu sella sillai pinbu sendraal Oorkolam endru pero Thindaadum idai kondaadum enai Kandodum nilaiyaatho Male Part Sriranganaathan paarkumpothu Kovilil illai sridevi maadhu Sriranganaathan paarkumpothu Kovilil illai sridevi maadhu Sri raman munnae vaithegi pinnae Idam maara nernthaal parithaabam parithaabam Male Part Yaar enna sonnaar yaenintha kobam Nee konda mounam naan seitha paavam Male Part Antha naalil vanji konda Aasai maara kandean Intha naalil penmai yaeno Vesham poda kandaen Male Part Nilladi konjam vedhanai pothum Solladi kannae sodhanai pothum Nilladi konjam vedhanai pothum Solladi kannae sodhanai pothum Ikkarai meedhu yaengugindraenae Akkarai illaiyo parithaabam parithaabam Male Part Yaar enna sonnaar yaenintha kobam Nee konda mounam naan seitha paavam Male Part Kaaveri vellam karai meeri ponaal Nanjaigalin kathi ennavo Kannaana ullam punnaagumaanaal Kadhal pogum thisai ennavo Male Part Pooppondra penmai porkalamaanaal Menmaiyum illai nanmaiyum illai Pooppondra penmai porkalamaanaal Menmaiyum illai nanmaiyum illai Kallaaga neeyum kaniyaaga naanum Yaen vaazha vendum parithaabam parithaabam Male Part Yaar enna sonnaar yaenintha kobam Nee konda mounam naan seitha paavam
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தரராஜன் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : யார் என்ன சொன்னார் ஏனிந்த கோபம் யார் என்ன சொன்னார் ஏனிந்த கோபம் நீ கொண்ட மௌனம் நான் செய்த பாவம் யார் என்ன சொன்னார் ஏனிந்த கோபம் நீ கொண்ட மௌனம் நான் செய்த பாவம் ஆண் : தேர் முன்பு செல்ல சிலை பின்பு சென்றால் ஊர்கோலம் என்று பேரோ திண்டாடும் இடை கொண்டாடும் எனை கண்டோடும் நிலையாதோ ஆண் : ஸ்ரீரங்கநாதன் பார்க்கும்போது கோவிலில் இல்லை ஸ்ரீதேவி மாது ஸ்ரீரங்கநாதன் பார்க்கும்போது கோவிலில் இல்லை ஸ்ரீதேவி மாது ஸ்ரீராமன் முன்னே வைதேகி பின்னே இடம் மாற நேர்ந்தால் பரிதாபம் பரிதாபம் ஆண் : யார் என்ன சொன்னார் ஏனிந்த கோபம் நீ கொண்ட மௌனம் நான் செய்த பாவம் ஆண் : அந்த நாளில் வஞ்சி கொண்ட ஆசை மாறக் கண்டேன் இந்த நாளில் பெண்மை ஏனோ வேஷம் போடக் கண்டேன் ஆண் : நில்லடி கொஞ்சம் வேதனை போதும் சொல்லடி கண்ணே சோதனை போதும் நில்லடி கொஞ்சம் வேதனை போதும் சொல்லடி கண்ணே சோதனை போதும் இக்கரை மீது ஏங்குகின்றேனே அக்கைறை இல்லையோ பரிதாபம் பரிதாபம் ஆண் : யார் என்ன சொன்னார் ஏனிந்த கோபம் நீ கொண்ட மௌனம் நான் செய்த பாவம் ஆண் : காவேரி வெள்ளம் கரை மீறி போனால் நஞ்சைகளின் கதி என்னவோ கண்ணான உள்ளம் புண்ணாகுமானால் காதல் போகும் திசை என்னவோ ஆண் : பூப்போன்ற பெண்மை போர்க்களமானால் மென்மையும் இல்லை நன்மையையும் இல்லை பூப்போன்ற பெண்மை போர்க்களமானால் மென்மையும் இல்லை நன்மையையும் இல்லை கல்லாக நீயும் கனியாக நானும் ஏன் வாழ வேண்டும் பரிதாபம் பரிதாபம் ஆண் : யார் என்ன சொன்னார் ஏனிந்த கோபம் நீ கொண்ட மௌனம் நான் செய்த பாவம்
Song information
Singer: T. M. Soundararajan
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Ilaya Thalaimurai (1977) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: T. M. Soundararajan
- Film / album: Ilaya Thalaimurai
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan