Roman script

Singer : K. S. Chitra

Music by : Chandrabose

Chorus

Aaa…..aaa….aa….aa….aa….

Aaa…..aaa….aa….aa….aa….

Female Part

Santhosham kaanaatha vaazhvundaa

Sangeetham paadaatha aarunudaa

Oru thunbam vanthaal adhai inbam endru

Enni vaazhnthuvittaal

Female Part

Santhosham kaanaatha vaazhvundaa

Sangeetham paadaatha aarunudaa

Chorus

Aaa…..aaa….aa….aa….aa….

Aaa…..aaa….aa….aa….aa….

Female Part

Oorukku sinthum vaan mazhai thannil

Unakkendru konjam thuligal undu

Nambikkai meedhu nambikkai kondaal

Naalaigal indrae varuvathundu

Female Part

Pagal vanthapothu velichcham undu

Irul vanthapothu vilakku undu

Erumbukkum kooda sugangal undu

Female Part

Santhosham kaanaatha vaazhvundaa

Chorus

………….

Female Part

Kallinil vaazhum theraiyum kooda

Kangalil neerai vadikkavillai

Kaattiil vaazhum maangalukellaam

Naalaiyai enni nadukkamillai

Female Part

Aintharivellaam kalippathenna

Aararivellaam thudippathenna

madhi kondathaalae mayakkamenna

Female Part

Santhosham kaanaatha vaazhvundaa

Sangeetham paadaatha aarunudaa

Oru thunbam vanthaal adhai inbam endru

Enni vaazhnthuvittaal

Female Part

Santhosham kaanaatha vaazhvundaa

Sangeetham paadaatha aarunudaa….

தமிழ்

பாடகி : கே. எஸ். சித்ரா

இசையமைப்பாளர் : சந்திரபோஸ்

குழு : ஆஅ.....ஆஅ.....ஆ......ஆ......ஆ....

ஆஅ.....ஆஅ.....ஆ......ஆ......ஆ....

பெண் : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா

சங்கீதம் பாடாத ஆறுண்டா

ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று

எண்ணி வாழ்ந்துவிட்டால்

சந்தோஷம் காணாத வாழ்வுண்டா

சங்கீதம் பாடாத ஆறுண்டா

குழு : ஆஅ.....ஆஅ.....ஆ......ஆ......ஆ....

ஆஅ.....ஆஅ.....ஆ......ஆ......ஆ....

பெண் : ஊருக்கு சிந்தும் வான் மழை தன்னில்

உனக்கென்று கொஞ்சம் துளிகள் உண்டு

நம்பிக்கை மீது நம்பிக்கை கொண்டால்

நாளைகள் இன்றே வருவதுண்டு

பெண் : பகல் வந்தபோது வெளிச்சம் உண்டு

இருள் வந்தபோது விளக்கு உண்டு

எறும்புக்கும் கூட சுகங்கள் உண்டு

பெண் : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா

குழு : ..........................................

பெண் : கல்லினில் வாழும் தேரையும் கூட

கண்களில் நீரை வடிக்கவில்லை

காட்டினில் வாழும் மான்களுக்கெல்லாம்

நாளையை எண்ணி நடுக்கமில்லை

பெண் : ஐந்தறிவெல்லாம் களிப்பதென்ன

ஆறறிவெல்லாம் துடிப்பதென்ன

மதிக் கொண்டதாலே மயக்கமென்ன

பெண் : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா

சங்கீதம் பாடாத ஆறுண்டா

ஒரு துன்பம் வந்தால் அதை இன்பம் என்று

எண்ணி வாழ்ந்துவிட்டால்

பெண் : சந்தோஷம் காணாத வாழ்வுண்டா

சங்கீதம் பாடாத ஆறுண்டா....

Song information

Singer: K. S. Chitra

Music by: Chandrabose

Release information: From Vasanthi (1988) · Lyricist: Vairamuthu

Explore this song