Roman script
Singers : S. P. Balasubrahmanyam and S. Janaki Music by : Hamsalekha Male Part Poovae unnai nesithaen Pookal kondu poosithaen Kannil paadam vaasithaen Kaadhal vendum yaasithaen Sollathan vaarthai illai kannae Ullathil osai illai Oomaikku bhashai illai Kanmaniyae mounam thaanae thollai.. haa.. Female Part Neeya ennai nesithaai Pookkal kondu poosithai Unmai solla yosithaai Kozhai pola yasithaai Yen kanna meesai melae aasai Thean endraal saram vendum Aan endraal veeram vendum Aanmayinaal penmai vella vendum Male Part Devi neeyum illaamal Aavi ingu vaazhadhu Female Part Ohohoho Ahahaa Unmai dhanaa Male Part Ezhu jenmam ponaalum Indha bandham pogadhu Female Part Neeya…sonaai Meiyae dhanaa Male Part Unnayandri veru pennai ullam thedadhu Female Part Paedi polae vaanzthirundhal penmai saayadhu.. Haa.. Male Part Poovae unnai nesithaen Pookal kondu poosithaen Female Part Unmai solla yosithaai Kozhai pola yasithaai Female Part Kaadhaluku eppodhum Vaarthai mattum podhadhu Male Part Kannae undhan ennam enna Female Part Kannadithaal theeradhu Kaadhal ingu vaaradhu Male Part Ennai thandhean innum enna Female Part Penmai endraal veeranukkae Maalai thandhuvidum Veeramulla kaigalukkae Sealai thandhu vidum ..hoo.. Male Part Poovae unnai nesithaen Pookal kondu poosithaen Kannil paadam vaasithaen Kaadhal vendum yaasithaen Female Part Yen kanna meesai melae aasai Thean endraal saram vendum Aan endraal veeram vendum Aanmayinaal penmai vella vendum
தமிழ்
பாடகர்கள் : எஸ். பி. பாலசுப்ரமண்யம் மற்றும் எஸ்.ஜானகி இசையமைப்பாளர் : ஹம்சலேகா ஆண் : பூவே உன்னை நேசித்தேன் பூக்கள் கொண்டு பூசித்தேன் கண்ணில் பாடம் வாசித்தேன் காதல் வேண்டும் யாசித்தேன் சொல்லத்தான் வார்த்தை இல்லை கண்ணே உள்ளத்தில் ஓசை இல்லை ஊமைக்கு பாஷை இல்லை கண்மணியே மெளனம் தானே தொல்லை.. ஹா.. பெண் : நீயா என்னை நேசித்தாய் பூக்கள் கொண்டு பூசித்தாய் உண்மை சொல்ல யோசித்தாய் கோழை போல யாசித்தாய் ஏன் கண்ணா மீசை மேலே ஆசை தேனென்றால் சாரம் வேண்டும் ஆணென்றால் வீரம் வேண்டும் ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும் ஆண் : தேவி நீயும் இல்லாமல் ஆவி இங்கு வாழாது பெண் : ஓ ஹோ... ஆ ஹா... உண்மைதானா ஆண் : ஏழு ஜென்மம் போனாலும் இந்த பந்தம் போகாது பெண் : நீயா... சொன்னாய் மெய்யேதானா ஆண் : உன்னையன்றி வேறு பெண்ணை உள்ளம் தேடாது பெண் : பேடி போல வாழ்ந்திருந்தால் பெண்மை சாயாது.. ஆ... ஆண் : பூவே உன்னை நேசித்தேன் பூக்கள் கொண்டு பூசித்தேன் பெண் : உண்மை சொல்ல யோசித்தாய் கோழை போல யாசித்தாய் பெண் : காதலுக்கு எப்போதும் வார்த்தை மட்டும் போதாது ஆண் : கண்ணே உந்தன் எண்ணம் என்ன பெண் : கண்ணடித்தால் தீராது காதல் இங்கு வாராது ஆண் : என்னைத் தந்தேன் இன்னும் என்ன பெண் : பெண்மையென்றால் வீரனுக்கே மாலை தந்துவிடும் வீரமுள்ள கைகளுக்கே சேலை தந்துவிடும்..ஹோ.. ஆண் : பூவே உன்னை நேசித்தேன் பூக்கள் கொண்டு பூசித்தேன் கண்ணில் பாடம் வாசித்தேன் காதல் வேண்டும் யாசித்தேன் பெண் : ஏன் கண்ணா மீசை மேலே ஆசை தேனென்றால் சாரம் வேண்டும் ஆணென்றால் வீரம் வேண்டும் ஆண்மையினால் பெண்மை வெல்ல வேண்டும்
Song information
Singers: S. P. Balasubrahmanyam and S. Janaki
Music by: Hamsalekha
Release information: From Paruva Raagam (1987) · Lyricist: Panchu Arunachalam
Explore this song
- Singer: S. P. Balasubrahmanyam and S. Janaki
- Film / album: Paruva Raagam
- Composer: Hamsalekha