Roman script

Singer : T. S. Bagavathi

Music by : Vishwanathan-Ramamoorthy

Female Part

Kann moodi kadhai mudithaai

Kanalodu uravu kondaai

Kariya pugai thaer yeri

Kaatrodu kalandhu vittaai

Megangal aanaai vinmeenaai maari vittaai

Raagangal polae oliyirukka uruvizhanthaai

Female Part

Pettreduthu perum ittu

Vaazha vaithaaiyae

Pirinthirukkum emmai vittu

Maraindhu sendraaiyae

Female Part

Pettreduthu perum ittu

Vaazha vaithaaiyae

Pirinthirukkum emmai vittu

Maraindhu sendraaiyae

Female Part

Pottu vaithu poo mudithu

Anaithiruppaayae

Pottu vaithu poo mudithu

Anaithiruppaayae

Un pon udalai theeyinilae anaithu vittayae

Female Part

Pettreduthu perum ittu

Vaazha vaithaaiyae

Pirinthirukkum emmai vittu

Maraindhu sendraaiyae

Female Part

Thanai maranthu pillaigalai

Paarthirunthaayae

Vazhi thavarum podhu veliyittu

Kaathirunthaayae

Pudhu magalai marumagalai kondu vandhaayae

Nee poru magalae kaalam varum endru sonnaayae

Aae…ae…ae…

Poru magalae kaalam varum endru sonnaayae

Female Part

Kaalam varum velayilae

Kaalan vanthaanae

Ullam kaniyum munnae paavi avan

Kaai parithaanae

Female Part

Pettreduthu perum ittu

Vaazha vaithaaiyae

Pirinthirukkum emmai vittu

Maraindhu sendraaiyae

Female Part

Ezhai magal engu selven

Yaaridam solven

Enaiarindha orr uyirai izhandhu vittenae

Engalin thaayae nee engu sendraayoo

Ingu ondrum angu ondrum endru serumoo

Vaazhkai enna aagumoo…aa….

Enna aagumoo

Female Part

Pettreduthu perum ittu

Vaazha vaithaaiyae

Pirinthirukkum emmai vittu

Maraindhu sendraaiyae

தமிழ்

பாடகர் : டி. எஸ். பகவதி

இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி

பெண் : கண் மூடி கதை முடித்தாய்

கனலோடு உறவு கொண்டாய்

கரிய புகை தேர் ஏறி

காற்றோடு கலந்து விட்டாய்

மேகங்கள் ஆனாய் விண்மீனாய் மாறி விட்டாய்

ராகங்கள் போலே ஒளியிருக்க உருவிழந்தாய்

பெண் : பெற்றெடுத்து பேரும் இட்டு

வாழ வைத்தாயே

பிரிந்திருக்கும் எம்மை விட்டு

மறைந்து சென்றாயே

பெண் : பெற்றெடுத்து பேரும் இட்டு

வாழ வைத்தாயே

பிரிந்திருக்கும் எம்மை விட்டு

மறைந்து சென்றாயே

பெண் : பொட்டு வைத்து பூ முடித்து

அனைத்திருப்பாயே

பொட்டு வைத்து பூ முடித்து

அனைத்திருப்பாயே

உன் பொன் உடலை தீயினிலே

அனைத்து விட்டாயே

பெண் : பெற்றெடுத்து பேரும் இட்டு

வாழ வைத்தாயே

பிரிந்திருக்கும் எம்மை விட்டு

மறைந்து சென்றாயே

பெண் : தனை மறந்து பிள்ளைகளை

பார்த்திருந்தாயே

வழி தவறும் போது வேலியிட்டு

காத்திருந்தாயே

புது மகளை மருமகளை கொண்டு வந்தாயே

நீ பொறு மகளே காலம் வரும் என்று சொன்னாயே

ஏ.....ஏ......ஏ....

பொறு மகளே காலம் வரும் என்று சொன்னாயே

பெண் : காலம் வரும் வேளையிலே

காலன் வந்தானே

உள்ளம் கனியும் முன்னே பாவி அவன்

காய் பறித்தானே

பெண் : பெற்றெடுத்து பேரும் இட்டு

வாழ வைத்தாயே

பிரிந்திருக்கும் எம்மை விட்டு

மறைந்து சென்றாயே

பெண் : ஏழை மகள் எங்கு செல்வேன்

யாரிடம் சொல்வேன்

எனையறிந்த ஓர் உயிரை இழந்து விட்டானே

எண்களின் தாயே நீ எங்கு சென்றாயோ

இங்கு ஒன்றும் அங்கு ஒன்றும் என்று சேருமோ

வாழ்க்கை என்ன ஆகுமோ.....ஆ....

என்ன ஆகுமோ

பெண் : பெற்றெடுத்து பேரும் இட்டு

வாழ வைத்தாயே

பிரிந்திருக்கும் எம்மை விட்டு

மறைந்து சென்றாயே

Song information

Singer: T. S. Bagavathi

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Manapanthal (1961) · Lyricist: Kannadasan

Explore this song