Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : K. V. Mahadevan

Male Part

Pattu chaelai kaathaada

Paruva maeni koothaada

Pattu chaelai kaathaada

Paruva maeni koothaada

Kattu koondhal mudithavalae ennai

Kaadhal valaiyil adaithavalae

Female Part

Arumbu meesai thulli vara

Azhagu punnagai alli vara

Arumbu meesai thulli vara

Azhagu punnagai alli vara

Kurumbu paarvai paarthavarae ennai

Koottu kiliyaai adaithavarae

Male Part

Kaiyil eduthaal thuvandu vidum

Kannam irandum sivandhu vidum

Kaiyil eduthaal thuvandu vidum

Kannam irandum sivandhu vidum

Chinna idaiyae sithiramae

Sirikkum kaadhal nithilamae

Female Part

Nimirndhu nadakkum nadaiyazhagu

Nerungi pazhagum kalaiyazhagu

Nimirndhu nadakkum nadaiyazhagu

Nerungi pazhagum kalaiyazhagu

Amaidhiyil niraiyum mugathazhagu

Yaavum unghal thaniyazhagu

Male Part

Kattu koondhal mudithavalae ennai

Kaadhal valaiyil adaithavalae

Female Part

Kurumbu paarvai paarthavarae ennai

Koottu kiliyaai adaithavarae

Male Part

Uranginaalum vizhithaalum

Oorgal thorum alaindhaalum

Uranginaalum vizhithaalum

Oorgal thorum alaindhaalum

Mayanga vaithadhu oru mugamae

Mangai undhan thirumugamae

Female Part

Kaasu panangal kettkavillai

Jaadhi madhangal paarkkavillai

Kaasu panangal kettkavillai

Jaadhi madhangal paarkkavillai

Thaavi vandhadhu en manamae ini

Thaazhvum vaazhvum un vasamae

Male Part

Kattu koondhal mudithavalae ennai

Kaadhal valaiyil adaithavalae

Pattu chaelai kaathaada

Paruva maeni koothaada

Female Part

Kurumbu paarvai paarthavarae ennai

Koottu kiliyaai adaithavarae

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுசீலா

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

ஆண் : பட்டுச்சேலை காத்தாட

பருவமேனி கூத்தாட

பட்டுச்சேலை காத்தாட

பருவமேனி கூத்தாட

கட்டு கூந்தல் முடித்தவளே என்னைக்

காதல் வலையில் அடைத்தவளே

பெண் : அரும்பு மீசை துள்ளி வர

அழகுப் புன்னகை அள்ளி வர

அரும்பு மீசை துள்ளி வர

அழகுப் புன்னகை அள்ளி வர

குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக்

கூட்டுக் கிளியாய் அடைத்தவரே

ஆண் : கையில் எடுத்தால் துவண்டு விடும்

கன்னம் இரண்டும் சிவந்து விடும்

கையில் எடுத்தால் துவண்டு விடும்

கன்னம் இரண்டும் சிவந்து விடும்

சின்ன இடையே சித்திரமே

சிரிக்கும் காதல் நித்திலமே

பெண் : நிமிர்ந்து நடக்கும் நடையழகு

நெருங்கிப் பழகும் கலையழகு

நிமிர்ந்து நடக்கும் நடையழகு

நெருங்கிப் பழகும் கலையழகு

அமைதியில் நிறையும் முகத்தழகு

யாவும் உந்தன் தனியழகு

ஆண் : கட்டு கூந்தல் முடித்தவளே என்னைக்

காதல் வலையில் அடைத்தவளே

பெண் : குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக்

கூட்டுக் கிளியாய் அடைத்தவரே

ஆண் : உறங்கினாலும் விழித்தாலும்

ஊர்கள் தோறும் அலைந்தாலும்

உறங்கினாலும் விழித்தாலும்

ஊர்கள் தோறும் அலைந்தாலும்

மயங்க வைத்தது ஒரு முகமே

மங்கை உந்தன் திருமுகமே

பெண் : காசு பணங்கள் கேட்கவில்லை

ஜாதி மதங்கள் பார்ப்பதில்லை

காசு பணங்கள் கேட்கவில்லை

ஜாதி மதங்கள் பார்ப்பதில்லை

தாவி வந்தது என் மனமே

இனி தாழ்வும் வாழ்வும் உன் வசமே

ஆண் : கட்டு கூந்தல் முடித்தவளே என்னைக்

காதல் வலையில் அடைத்தவளே

பட்டுச்சேலை காத்தாட

பருவமேனி கூத்தாட

பெண் : குறும்புப் பார்வை பார்த்தவரே என்னைக்

கூட்டுக் கிளியாய் அடைத்தவரே

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: K. V. Mahadevan

Release information: From Thaai Sollai Thattadhe (1961) · Lyricist: Kannadasan

Explore this song