Roman script

Singers : T. M. Soundarajan and S. C. Krishnan

Music by : R. Govarthanam

Lyrics by : Kannadasan

Male Part

Aandavanai padaithavanae aadhi mudhalva

Indha avaniyai aatti veikkum engal iraivaa

Vendiyavarkkarul vazhangum velli uruvaai

En vaedhanaiyaai theerthu vaikka

Odi odi odi varuvaai

Male Part

Panam naadha inba guna naadha

Appa panam naadha inba guna naadha

Ulagai pambaramaai aatti veikkum arul naadha

Panam naadha inba guna naadha

Ulagai pambaramaai aatti veikkum arul naadha

Male Part

Appa panam naadha

Male Part

Vaangi kondu ponavargal tharuvadhillai

Indha vaasal pakkam kooda avar varuvadhillai

Unnai thaekki vaithu kondaalum nimmadhiyillai..ae

Unnai thaekki vaithu kondaalum nimmadhiyillai

Dhinam thedi thedi alaibavarkkum amaidhiyillai

Both : Appa panam naadha inba guna naadha

Appa panam naadha inba guna naadha

Male Part

Perazhagu pengalaiyum manamudippaai

Petra pillaiyaiyum thandhaiyaiyum pirithu veithaai

Male : Haiyoo

Male : Perazhagu pengalaiyum manamudippaai

Petra pillaiyaiyum thandhaiyaiyum pirithu veithaai

Car yeri rottinilae parakka vaippaai

Silarai kadanaaliyaakki vittu vidai koduppaai

Both : Appa panam naadha inba guna naadha

Appa panam naadha inba guna naadha

Male Part

Tharkurigal pakkathilae nee irundhaal

Male Part

Avargal saritheerathu verargalaai maari viduvaai

Male Part

Indha tharkurigal pakkathilae nee irundhaal

Male Part

Avargal saritheerathu verargalaai maari viduvaai

Male Part

Kattrarindha pergalidam illai nee endraal

Kattrarindha pergalidam illai nee endraal

Avar kandhal katti sundalukku kaathu kidappaar

Both : Appa panam naadha inba guna naadha

Ulagai pambaramaai aatti veikkum arul naadha

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தராஜன் மற்றும் எஸ். சி. கிருஷ்ணன்

இசை அமைப்பாளர் : ஆர். கோவர்த்தனம்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஆண்டவனைப் படைத்தவனே ஆதி முதல்வா

இந்த அவனியை ஆட்டி வைக்கும் எங்கள் இறைவா

வேண்டியவர்க்கருள் வழங்கும் வெள்ளி உருவாய்

என் வேதனையைத் தீர்த்து வைக்க

ஓடி ஓடி ஓடி வருவாய்....!

ஆண் : பண நாதா இன்பக் குண நாதா

அப்பா பண நாதா இன்பக் குண நாதா

உலகைப் பம்பரமாய் ஆட்டி வைக்கும் அருள் நாதா..

பண நாதா இன்பக் குண நாதா

உலகைப் பம்பரமாய் ஆட்டி வைக்கும் அருள் நாதா.

ஆண் : அப்பா பணம் நாதா

ஆண் : வாங்கிக் கொண்டு போனவர்கள் தருவதில்லை

இந்த வாசல் பக்கம் கூட அவர் வருவதில்லை

உன்னை தேக்கி வைத்துக் கொண்டாலும் நிம்மதியில்லை

உன்னை தேக்கி வைத்துக் கொண்டாலும் நிம்மதியில்லை

தினம் தேடித் தேடி அலைபவர்க்கும் அமைதியில்லை

ஆண்கள் : அப்பா பண நாதா இன்பக் குண நாதா

அப்பா பண நாதா இன்பக் குண நாதா

ஆண் : பேரழகுப் பெண்களையும் மணமுடிப்பாய்

பெற்ற பிள்ளையையும் தந்தையையும் பிரித்து வைப்பாய்

ஆண் : ஹையோ

ஆண் : பேரழகுப் பெண்களையும் மணமுடிப்பாய்

பெற்ற பிள்ளையையும் தந்தையையும் பிரித்து வைப்பாய்

காரேறி ரோட்டினிலே பறக்க வைப்பாய்

சிலரைக் கடனாளியாக்கி விட்டு விடை கொடுப்பாய் ( பண)

ஆண்கள் : அப்பா பண நாதா இன்பக் குண நாதா

அப்பா பண நாதா இன்பக் குண நாதா

ஆண் : தற்குறிகள் பக்கத்திலே நீ இருந்தால்

ஆண் : அவர்கள் சரித்திரத்து வீரர்களாய் மாறி விடுவாய்

ஆண் : இந்த தற்குறிகள் பக்கத்திலே நீ இருந்தால்

ஆண் : அவர்கள் சரித்திரத்து வீரர்களாய் மாறி விடுவாய்

ஆண் : கற்றறிந்த பேர்களிடம் இல்லை நீயென்றால்

கற்றறிந்த பேர்களிடம் இல்லை நீயென்றால்

அவர் கந்தல் கட்டிச் சுண்டலுக்குக் காத்துக் கிடப்பார்

ஆண்கள் : அப்பா பண நாதா இன்பக் குண நாதா

அப்பா பண நாதா இன்பக் குண நாதா

Song information

Singers: T. M. Soundarajan and S. C. Krishnan

Music by: R. Govarthanam

Lyrics by: Kannadasan

Release information: From Orey Vazhi (1959) · Singer: T. M. Soundarajan and S. C. Krishnan · Lyricist: Kannadasan · Music: R. Govarthanam

Explore this song