Roman script

Singer : L. R. Eswari

Music by : M. S. Vishwanathan

Female Part

Nee ennai vittu pogaadhae

Indha kanni manam thaangaadhae

Female Part

Nee yennai vittu pogaadhae

Indha kanni manam thaangaadhae

Vittu ponaal pattu poovin

Vannam yaavum vaadi pogumae

Female Part

Oru kaiyil koppai

Maru kaiyil paavai

Eduthu kondaadu inimai panpaadu

Kaalam pon pondradhu

Kaadhal kan pondradhu

Ponaal ennaavadhu

Vaa vaa indraavadhu

Female Part

Nee yennai vittu pogaadhae

Indha kanni manam thaangaadhae

Vittu ponaal pattu poovin

Vannam yaavum vaadi pogumae

Female Part

Sooriyan thoongiyadhu

Ingu chandhiran thondriyadhu

Sooriyan thoongiyadhu

Ingu chandhiran thondriyadhu

Aayiratthil neeyoruthan thaanae

Aasai kondu thaerndheduthaen naanae

Thithikkindra muthiraigal thaenae

Thigattum varaikkum thirumba thaa

Female Part

Thathai sollum vithaiyellaam

Methai vandhaal kaana koodum

Female Part

Poo pandhu polirukkum

Vanna poondhugil maelirukkum

Vaanagathu maenagaikku thangai

Vaarthedutha oviyam pol mangai

Inbamendra vellamoorum gangai

Iravu muzhuvadhum uravil midhakka vaa

Female Part

Ondru thandhaal nooru thandhu

Nandri sollum nangai naanandro

Female Part

Nee yennai vittu pogaadhae

Indha kanni manam thaangaadhae

Vittu ponaal pattu poovin

Vannam yaavum vaadi pogumae

தமிழ்

பாடகி : எல். ஆர். ஈஸ்வரி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பெண் : நீ என்னை விட்டு போகாதே

இந்தக் கன்னி மனம் தாங்காதே

பெண் : நீ என்னை விட்டு போகாதே

இந்தக் கன்னி மனம் தாங்காதே

விட்டுப் போனால் பட்டுப் பூவின்

வண்ணம் யாவும் வாடிப் போகுமே

பெண் : ஒரு கையில் கோப்பை

மறு கையில் பாவை

எடுத்துக் கொண்டாடு இனிமை பண்பாடு

காலம் பொன் போன்றது

காதல் கண் போன்றது

போனால் என்னாவது

வா வா இன்றாவது

பெண் : நீ என்னை விட்டு போகாதே

இந்தக் கன்னி மனம் தாங்காதே

விட்டுப் போனால் பட்டுப் பூவின்

வண்ணம் யாவும் வாடிப் போகுமே

பெண் : சூரியன் தூங்கியது

இங்கு சந்திரன் தோன்றியது

சூரியன் தூங்கியது

இங்கு சந்திரன் தோன்றியது

ஆயிரத்தில் நீயொருத்தன் தானே

ஆசைக் கொண்டு தேர்ந்தெடுத்தேன் நானே

தித்திக்கின்ற முத்திரைகள் தேனே

திகட்டும் வரைக்கும் திரும்பத் திரும்பத் தா.....

பெண் : தத்தை சொல்லும் வித்தையெல்லாம்

மெத்தை வந்தால் காணக் கூடுமே

பெண் : பூப் பந்து போலிருக்கும்

வண்ணப் பூந்துகில் மேலிருக்கும்

வானகத்து மேனகைக்குத் தங்கை

வார்த்தெடுத்த ஓவியம் போல் மங்கை

இன்பமென்ற வெள்ளமூறும் கங்கை

இரவு முழுவதும் உறவில் மிதக்க வா

பெண் : ஒன்று தந்தால் நூறு தந்து

நன்றி சொல்லும் நங்கை நானன்றோ

பெண் : நீ என்னை விட்டு போகாதே

இந்தக் கன்னி மனம் தாங்காதே

விட்டுப் போனால் பட்டுப் பூவின்

வண்ணம் யாவும் வாடிப் போகுமே

Song information

Singer: L. R. Eswari

Music by: M. S. Vishwanathan

Release information: From Sirithu Vazha Vendum (1974) · Lyricist: Pulamaipithan

Explore this song