Roman script

Singer : T. M. Soundararajan

Music by : T.Pugazhenthi

Male Part

Naan ungalai ketkkindren

Male Part

Naan ungalai ketkkindren

Naan ungalai ketkkindren

Ezhai urimaiyai kaakka

Varumaiyai neekka

Urimaiyai kaakka varumaiyai neekka

Ullavar sollum bathilenna

Naan ungalai ketkkindren

Male Part

{Poiyai nambi pizhaippavan veetil

Neiyum paalum manappadha

Kaiyai nambi uzhaippavan veetil

Kanji kalayam uruluvadha} (2)

Male Part

Azhuvadhai maatri sirippadhai kaatta

Azhuvadhai maatri sirippadhai kaatta

Arindhavar sollum bathilenna

Male Part

Naan ungalai ketkkindren

Male Part

{Silandhi valaiyai pinni vaithu

Siru siru poochiyai pidikkuthaiyaa

Palarai sila per paniya vaikka

Panam thaan valaiyaai udhavudhaiyaa} (2)

Male Part

Pattini theerkkum

Thittangal theetta

Pattini theerkkum thittangal theetta

Padithavar sollum bathilenna

Male Part

Naan ungalai ketkkindren

Male Part

Ethanai kaalam indha kelvi

Ezhaikku yeno indha needhi

Buthanum yesuvum uthaman gaandhiyum

Boomiyilae pirandhadhu veen thaana

Male Part

Puratchiyil thondrum

Pudhumaiyai kaana

Puratchiyil thondrum pudhumaiyai kaana

Purindhavar sollum bathilenna

Male Part

Naan ungalai ketkkindren

Ezhai urimaiyai kaakka

Varumaiyai neekka

Ullavar sollum bathilenna

Naan ungalai ketkkindren

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : டி. புகழேந்தி

ஆண் : நான் உங்களை கேட்கின்றேன்

ஆண் : நான் உங்களை கேட்கின்றேன்

நான் உங்களை கேட்கின்றேன்

ஏழை உரிமையைக் காக்க

வறுமையை நீக்க

உரிமையைக் காக்க வறுமையை நீக்க

உள்ளவர் சொல்லும் பதிலென்ன

நான் உங்களை கேட்கின்றேன்......

ஆண் : {பொய்யை நம்பிப் பிழைப்பவன் வீட்டில்

நெய்யும் பாலும் மணப்பதா

கையை நம்பி உழைப்பவன் வீட்டில்

கஞ்சி கலயம் உருளுவதா} (2)

ஆண் : அழுவதை மாற்றி சிரிப்பதைக் காட்ட

அழுவதை மாற்றி சிரிப்பதைக் காட்ட

அறிந்தவர் சொல்லும் பதிலென்ன

ஆண் : நான் உங்களை கேட்கின்றேன்

ஆண் : {சிலந்தி வலையைப் பின்னி வைத்து

சிறுசிறு பூச்சியை பிடிக்குதய்யா

பலரை சில பேர் பணிய வைக்க

பணம்தான் வலையாய் உதவுதய்யா} (2)

ஆண் : பட்டினி தீர்க்கும்

திட்டங்கள் தீட்ட

பட்டினி தீர்க்கும் திட்டங்கள் தீட்ட

படித்தவர் சொல்லும் பதிலென்ன

ஆண் : நான் உங்களை கேட்கின்றேன்

ஆண் : எத்தனை காலம் இந்தக் கேள்வி

ஏழைக்கு ஏனோ இந்த நீதி

புத்தனும் ஏசுவும் உத்தமன் காந்தியும்

பூமியிலே பிறந்தது வீண்தானா

ஆண் : புரட்சியில் தோன்றும்

புதுமையைக் காண

புரட்சியில் தோன்றும் புதுமையைக் காண

புரிந்தவர் சொல்லும் பதிலென்ன...

ஆண் : நான் உங்களை கேட்கின்றேன்

ஏழை உரிமையைக் காக்க

வறுமையை நீக்க

உள்ளவர் சொல்லும் பதிலென்ன

நான் உங்களை கேட்கின்றேன்......

Song information

Singer: T. M. Soundararajan

Music by: T.Pugazhenthi

Release information: From Selviyin Selvan (1968) · Lyricist: Trichy Thiyagarajan

Explore this song