Roman script
Singer : T. M. Soundarajan Music Director : M. S. Vishwanathan Lyricist : Vaali Male Part Naan kadavulai kanden En kulandhai vadivilae Avan karunaiyai kanden Konjum mazhalai mozhiyilae Mazhalai mozhiyilae Male Part Naan kadavulai kanden En kulandhai vadivilae Avan karunaiyai kanden Konjum mazhalai mozhiyilae Male Part Whistle……. Male Part Paal vadiyum un poo mugathil Aayiram kanavu kanden Naalai varum nalla vaazhvu enum Andha ninaivaal vaazhgindren Male Part Unakkoru thaai pola Thanakkillaiyae endru iraivan kettaano Unakkoru thaai pola Thanakkillaiyae endru iraivan kettaano Enakkena unnaikoduthu Un annai angae ponaalo Ange ponaalo Male Part Naan kadavulai kanden En kulandhai vadivilae Avan karunaiyai kanden Konjum mazhalai mozhiyilae Male Part Aalamaram ena nee valarum Naal thaan vara vendum Kalaimagal arulum alaimagal porulum Niraindhe pera vendum Male Part Arivudan thigazhulum thirumagan pugalum Kadal pol perugaadho Arivudan thigazhulum thirumagan pugalum Kadal pol perugaadho Paarthathum kettadhum eendravar nenjam Pani pol urugaadho Pani pol urugaadho Male Part Naan kadavulai kanden En kulandhai vadivilae Avan karunaiyai kanden Konjum mazhalai mozhiyilae Mazhalai mozhiyilae
தமிழ்
பாடகர் : டி. எம். சௌந்தராஜன் இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடல் ஆசிரியர் : வாலி ஆண் : நான் கடவுளைக் கண்டேன் என் குழந்தை வடிவிலே அவன் கருணையைக் கண்டேன் கொஞ்சும் மழலை மொழியிலே....... மழலை மொழியிலே....... ஆண் : நான் கடவுளைக் கண்டேன் என் குழந்தை வடிவிலே அவன் கருணையைக் கண்டேன் கொஞ்சும் மழலை மொழியிலே..... விசில் : ............. ஆண் : பால் வடியும் உன் பூ முகத்தில் ஆயிரம் கனவுக் கண்டேன் நாளை வரும் நல்ல வாழ்வு எனும் அந்த நினைவால் வாழ்கின்றேன் ஆண் : உனக்கொரு தாய்ப் போல் தனக்கில்லையே என்று இறைவன் கேட்டானோ உனக்கொரு தாய்ப் போல் தனக்கில்லையே என்று இறைவன் கேட்டானோ எனக்கென உன்னை கொடுத்து உன் அன்னை அங்கே போனாளோ........ அங்கே போனாளோ........ ஆண் : நான் கடவுளைக் கண்டேன் என் குழந்தை வடிவிலே அவன் கருணையைக் கண்டேன் கொஞ்சும் மழலை மொழியிலே....... ஆண் : ஆலமரம் என நீ வளரும் நாள்தான் வர வேண்டும் கலைமகள் அருளும் அலைமகள் பொருளும் நிறைந்தே பெற வேண்டும் ஆண் : அறிவுடன் திகழும் திருமகன் புகழும் கடல் போல் பெருகாதோ அறிவுடன் திகழும் திருமகன் புகழும் கடல் போல் பெருகாதோ பார்த்ததும் கேட்டதும் ஈன்றவர் நெஞ்சம் பனிப் போல் உருகாதோ...... பனிப் போல் உருகாதோ...... ஆண் : நான் கடவுளைக் கண்டேன் என் குழந்தை வடிவிலே அவன் கருணையைக் கண்டேன் கொஞ்சும் மழலை மொழியிலே....... மழலை மொழியிலே.......
Song information
Singer: T. M. Soundarajan
Release information: From Kallum Kaniyagum (1968) · Singer: T. M. Soundarajan · Lyricist: Vaali · Music: M. S. Vishwanathan
Explore this song
- Singer: T. M. Soundarajan
- Film / album: Kallum Kaniyagum