Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : A. Maruthakasi

Male Part

Manidhan ellam therindhu kondaan

Vaazhum vagai purindhu kondaan

Irundha podhum manidhanukku

Ondru mattum theriyavillaiyae hoo

Male Part

Manidhan ellam therindhu kondaan

Vaazhum vagai purindhu kondaan

Irundha podhum manidhanukku

Ondru mattum theriyavillaiyae hoo

Male Part

Iniya kuralil kuyil polae

Isaiyum azhagaai paadugindraan

Erudhugal polae vandigalai

Izhuthu kondu oodugindraan

Male Part

Vanathil vaazhum paravaigal pol

Vaanil parandhu thirigindraan

Vanathil vaazhum paravaigal pol

Vaanil parandhu thirigindraan

Manidhanaaga vaazha mattum

Manidhanukku theriyavillai hooo

Male Part

Manidhan ellam therindhu kondaan

Vaazhum vagai purindhu kondaan

Irundha podhum manidhanukku

Ondru mattum theriyavillaiyae hoo

Male Part

Saramilla vaazhkkaiyilae

Sakkaram polae suzhalugindraan

Eera mannal pala uruvai

Iraivan polae padaigkindraan

Male Part

Melum vilaivu nelivugalai

Neekki olungu paduthugindraan

Melum vilaivu nelivugalai

Neekki olungu paduthugindraan

Manidhanaaga vaazha mattum

Manidhanukku theriyavillai hoo

Male Part

Manidhan ellam therindhu kondaan

Vaazhum vagai purindhu kondaan

Irundha podhum manidhanukku

Ondru mattum theriyavillaiyae hoo

Male Part

Kollum paambin kodum vishathai

Sollil kodukka therindhu kondaan

Kullanari pol thandhirathaal

Kudiyai kedukka purindhu kondaan

Male Part

Velli panathal mattravarai

Vilaikku vaanga therindhu kondaan

Velli panathal mattravarai

Vilaikku vaanga therindhu kondaan

Manidhanaaga vaazha mattum

Manidhanukku theriyavillai hoo

Male Part

Manidhan ellam therindhu kondaan

Vaazhum vagai purindhu kondaan

Irundha podhum manidhanukku

Ondru mattum theriyavillaiyae hoo

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசை அமைப்பாளர் : கே. வி. மஹாதேவன்

பாடல் ஆசிரியர் : ஏ. மருதகாசி

ஆண் : மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்

வாழும் வகை புரிந்து கொண்டான்

இருந்த போதும் மனிதனுக்கு

ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ

ஆண் : மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்

வாழும் வகை புரிந்து கொண்டான்

இருந்த போதும் மனிதனுக்கு

ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ

ஆண் : இனிய குரலில் குயில் போலே

இசையும் அழகாய்ப் பாடுகின்றான்

எருதுகள் போலே வண்டிகளை

இழுத்துக் கொண்டு ஓடுகின்றான்

ஆண் : வனத்தில் வாழும் பறவைகள் போல்

வானில் பறந்து திரிகின்றான்

வனத்தில் வாழும் பறவைகள் போல்

வானில் பறந்து திரிகின்றான்

மனிதனாக வாழ மட்டும்

மனிதனுக்குத் தெரியவில்லை

ஆண் : மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்

வாழும் வகை புரிந்து கொண்டான்

இருந்த போதும் மனிதனுக்கு

ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ

ஆண் : சாரமில்லா வாழ்க்கையிலே

சக்கரம் போலே சுழலுகின்றான்

ஈர மண்ணால் பல உருவை

இறைவன் போலே படைக்கின்றான்

ஆண் : நேரும் வளைவு நெளிவுகளை

நீக்கி ஒழுங்கு படுத்துகின்றான்

நேரும் வளைவு நெளிவுகளை

நீக்கி ஒழுங்கு படுத்துகின்றான்

மனிதனாக வாழ மட்டும்

மனிதனுக்கு தெரியவில்லை

ஆண் : மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்

வாழும் வகை புரிந்து கொண்டான்

இருந்த போதும் மனிதனுக்கு

ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ

ஆண் : கொல்லும் பாம்பின் கொடும் விஷத்தை

சொல்லில் கொடுக்கத் தெரிந்து கொண்டான்

குள்ளநரி போல் தந்திரத்தால்

குடியைக் கெடுக்கப் புரிந்து கொண்டான்

ஆண் : வெள்ளிப் பணத்தால் மற்றவரை

விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்

வெள்ளிப் பணத்தால் மற்றவரை

விலைக்கு வாங்கத் தெரிந்து கொண்டான்

மனிதனாக வாழ மட்டும்

மனிதனுக்குத் தெரியவில்லை ஹோ

ஆண் : மனிதன் எல்லாம் தெரிந்து கொண்டான்

வாழும் வகை புரிந்து கொண்டான்

இருந்த போதும் மனிதனுக்கு

ஒன்று மட்டும் தெரியவில்லை ஹோ

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: K. V. Mahadevan

Lyrics by: A. Maruthakasi

Release information: From Azhagu Nila (1962) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: A. Maruthakasi · Music: K. V. Mahadevan

Explore this song