Roman script

Singers : P. Susheela and P. B. Sreenivas

Music by : Vishwanathan-Ramamoorthy

Male Part

Haa…haaa…aa…haaa haa aaa

Hoo oo oo hoo oo oo

Male Part

Idhazh mottu virindhida

Muthu vilaindhidum

Sithira pen paavai

Kan pattu maraindhennai

Vittu parandhidum

Kaaranam thaan yaadho

Ingu kobamum varalaamo

Mugam kunguma niramaamo

Female Part

Enai kandadhum

Vandhu kuzhaindhida nindravar

Kavinjanin uravaamo

Sonna sollai marandhavar

Ennai marandhavar

Yaarena theriyaadho

Vara thaamadham edhanaalo

Adhu kaadhalin gunamaamo

Male Part

Ilam thendralil manamaavaal

Alli kondadhum saeyaavaal

Naan vandhadhum paniyaavaal

Yaen indraval pagaiyaanaal

Female Part

Kodi kandadhum kilaiyaavaar

Isai vandhadhum mozhiyaavaar

Malar kandadhum vandaavaar

Kani kandadhum kiliyaavaar

Male Part

Ila malarukku kobamum varumo

Female Part

Varum vandukku idhu theriyaadho

Male Part

Andha vaanukkum nilavukkum pagaiyo

Female Part

Adhai kandadhu yaar enna kadhaiyo

Male Part

Idhazh mottu virindhida

Muthu vilaindhidum

Sithira pen paavai

Female Part

Enai kandadhum

Vandhu kuzhaindhida nindravar

Kavinjanin uravaamo

Male Part

Ingu kobamum varalaamo

Female : Vara thaamadham edhanaalo

Male Part

Andha valluvan kural polae

Aval vagaikkoru suvaiyaavaal

Karum kallinil manamaamo

Ennai kandadhum ilagaadho

Female Part

Avar kangalum siraiyaamo

Adhil kanniyar iraiyaamo

Izhai kallilum eduppaaro

Adhai pinniyum mudippaaro

Male Part

Anbu thazhaikkira idam enna manamo

Female Part

Vidhai thelikkira idam enna vizhiyo

Male Part

Nenjil ninaithadhum inippadhu edhuvo

Female Part

Konjam nerungida nerungida thunivo

Both : Idhazh mottu virindhida

Muthu vilaindhidum

Muthamizh payiraagum

Manam othu nadandhorumitha

Ulam thanil vaithadhu neriyaagum

Male Part

Ilam kaaviyam arangaerum

Female Part

Thendral kaattrinil suram paadum

Both : Aaha haahaa oho hoho

Aaha haahaa ohoho…aaahaaa

தமிழ்

பாடகர்கள் : பி. சுசீலா மற்றும் பி. பி. ஸ்ரீனிவாஸ்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் - ராமமூர்த்தி

ஆண் : ஹா.....ஹா....ஆ.....ஹா....ஹா.....ஆஅ.....

ஹோ ஓ ஓ ஹோ ஓ ஓ

ஆண் : இதழ் மொட்டு விரிந்திட

முத்து விளைந்திடும்

சித்திரப் பெண் பாவை

கண் பட்டு மறைந்தென்னை

விட்டு பறந்திடும்

காரணம்தான் யாதோ

இங்கு கோபமும் வரலாமோ

முகம் குங்கும நிறமாமோ

பெண் : எனை கண்டதும்

வந்து குழைந்திட நின்றவர்

கவிஞனின் உறவாமோ

சொன்ன சொல்லை மறந்தவர்

என்னை மறந்தவர்

யாரென தெரியாதோ

வர தாமதம் எதனாலோ

அது காதலின் குணமாமோ

ஆண் : இளம் தென்றலில் மணமாவாள்

அள்ளிக் கொண்டதும் சேயாவாள்

நான் வந்ததும் பனியாவாள்

ஏன் இன்றிவள் பகையானாள்

பெண் : கொடி கண்டதும் கிளையாவார்

இசை வந்ததும் மொழியாவார்

மலர் கண்டதும் வண்டாவார்

கனி கண்டதும் கிளியாவார்

ஆண் : இள மலருக்கு கோபமும் வருமோ

பெண் : வரும் வண்டுக்கு இது தெரியாதோ

ஆண் : அந்த வானுக்கும் நிலவுக்கும் பகையோ

பெண் : அதைக் கண்டது யார் என்ன கதையோ

ஆண் : இதழ் மொட்டு விரிந்திட

முத்து விளைந்திடும்

சித்திரப் பெண் பாவை

பெண் : எனை கண்டதும்

வந்து குழைந்திட நின்றவர்

கவிஞனின் உறவாமோ

ஆண் : இங்கு கோபமும் வரலாமோ

பெண் : வர தாமதம் எதனாலோ

ஆண் : அந்த வள்ளுவன் குறள் போலே

அவள் வகைக்கொரு சுவையாவாள்

கரும் கல்லினில் மணமாமோ

என்னை கண்டதும் இளகாதோ

பெண் : அவர் கண்களும் சிறையாமோ

அதில் கன்னியர் இரையாமோ

இழை கல்லிலும் எடுப்பாரோ

அதை பின்னியும் முடிப்பாரோ

ஆண் : அன்பு தழைக்கிற இடம் என்ன மனமோ

பெண் : விதை தெளிக்கிற இடம் என்ன விழியோ

ஆண் : நெஞ்சில் நினைத்ததும் இனிப்பது எதுவோ

பெண் : கொஞ்சம் நெருங்கிட நெருங்கிட துணிவோ

இருவர் : இதழ் மொட்டு விரிந்திட

முத்து விளைந்திடும்

முத்தமிழ் பயிராகும்

மனம் ஒத்து நடந்தோறுமித

உள்ளம் தனில் வைத்தது நெறியாகும்

ஆண் : இளம் காவியம் அரங்கேறும்

பெண் : தென்றல் காற்றினில் சுரம் பாடும்

இருவர் : ஆஹ ஹாஹா ஒஹொ ஹோஹோ

ஆஹ ஹாஹா ஒஹொஹோ.....ஆஹா

Song information

Singers: P. Susheela and P. B. Sreenivas

Music by: Vishwanathan-Ramamoorthy

Release information: From Bandha Pasam (1962) · Lyricist: Mayavanathan

Explore this song