Roman script
Singers : L. R. Eswari and P. Susheela
Music by : Vishwanathan-Ramamoorthy
Female Part
{Chithira poo vizhi vaasalilae
Vandhu yaar nindravaro
Female Part
Indha kattu karumbinai thottu
Kuzhaindhida yaar vandhavaro
Female Part
Yaar nindravaro
Female : Yaar vandhavaro} (2)
Female Part
Thendral azhaithu vara
Thanga thaerinil vandhaarae
Thendral azhaithu vara
Thanga thaerinil vandhaarae
Punnagai minnida vandhu aruginil
Nindravar ennavarae
Idam thandha en mannavarae
Female Part
Chithira poo vizhi vaasalile
Avar thaan nindravarae
Indha kattu karumbinai thottu
Kuzhaindhavar thaan ennavarae
Yaar nindravaro avar thaan ennavarae
Female Part
{Kattazhagil kavi kamban maganudan
Otti irundhavaro indha
Pattu udalinai thottanaikkum kalai
Katru thelindhavaro} (2)
Female Part
Unnai mattum aruginil vaithu
Dhinam dhinam suttri varubavaro
Ini katru koduthadhai othigai paarthidum
Muthamizh vithagarooo
Kalai mutrum arindhavaro
Kaadhal mattum therindhavaro
Female Part
Chithira poo vizhi vaasalilae
Vandhu yaar nindravaro
Indha kattu karumbinai thottu
Kuzhaindhida yaar vandhavaro
Female Part
{Vanna karu vizhi thannil varum vizhi
Endru azhaippadhuvo
Pasum ponnir pudhiyadhai kannan yena peyar
Solli thudhippadhuvo} (2)
Female Part
Oli minni varum iru kannasaivil kavi
Mannavan enbadhuvo illai
Thannai koduthanai thannil maraithavar
Vanna pudhu malarae
Avar nenjam malarillaiyae
Manam engum nirandhavarae
Female Part
Hooo ooo ooo oo oo oo oo
Hohooo oooo hoo ooooo
Female Part
Chithira poo vizhi vaasalile
Avar thaan nindravarae
Indha kattu karumbinai thottu
Kuzhaindhavar thaan ennavarae
Yaar nindravaro avar thaan ennavaraeதமிழ்
பாடகர்கள் : எல். ஆர். ஈஸ்வரி மற்றும் பி. சுசீலா
இசையமைப்பாளர் : விஸ்வநாதன் - ராமமூர்த்தி
பெண் : {சித்திரப் பூ விழி வாசலிலே
வந்து யார் நின்றவரோ
பெண் : இந்த கட்டுக் கரும்பினை தொட்டுக்
குழைந்திட யார் வந்தவரோ
பெண் : யார் நின்றவரோ
பெண் : யார் வந்தவரோ} (2)
பெண் : தென்றல் அழைத்து வர
தங்க தேரினில் வந்தாரே
தென்றல் அழைத்து வர
தங்க தேரினில் வந்தாரே
புன்னகை மின்னிட வந்து அருகினில்
நின்றவர் என்னவரே
இடம் தந்த என் மன்னவரே
பெண் : சித்திரப் பூ விழி வாசலிலே
அவர்தான் நின்றவரே
இந்த கட்டுக் கரும்பினை தொட்டுக்
குழைந்தவர்தான் என்னவரே
யார் நின்றவரோ அவர்தான் என்னவரே
பெண் : {கட்டழகில் கவி கம்பன் மகனுடன்
ஒட்டி இருந்தவரோ இந்த
பட்டு உடலினை தொட்டணைக்கும் கலை
கற்றுத் தெளிந்தவரோ} (2)
பெண் : உன்னை மட்டும் அருகினில் வைத்து
தினம் தினம் சுற்றி வருபவரோ
இனி கற்றுக் கொடுத்ததை ஒத்திகை பார்த்திடும்
முத்தமிழ் வித்தகரோ
கலை முற்றும் அறிந்தவரோ
காதல் மட்டும் தெரிந்தவரோ
பெண் : சித்திரப் பூ விழி வாசலிலே
வந்து யார் நின்றவரோ
இந்த கட்டுக் கரும்பினை தொட்டுக்
குழைந்திட யார் வந்தவரோ
பெண் : {வண்ணக் கருவிழி தன்னில் வரும் விழி
என்று அழைப்பதுவோ
பசும் பொன்னிற் புதியதை கண்ணன் என பெயர்
சொல்லி துதிப்பதுவோ} (2)
பெண் : ஒளி மின்னி வரும் இரு கண்ணசைவில் கவி
மன்னவன் என்பதுவோ இல்லை
தன்னைக் கொடுத்தனை தன்னில் மறைத்தவர்
வண்ணப் புது மலரே
அவர் நெஞ்சம் மலரில்லையே
மனம் எங்கும் நிறைந்தவரே
பெண் : ஹோ ஓஒ ஓஒ ஓ ஓ ஓஒ ஓ
ஹோஹோ ஓஒ ஹோ ஓஓஒ
பெண் : சித்திரப் பூ விழி வாசலிலே
அவர்தான் நின்றவரே
இந்த கட்டுக் கரும்பினை தொட்டுக்
குழைந்தவர்தான் என்னவரே
யார் நின்றவரோ அவர்தான் என்னவரேSong information
Singers: L. R. Eswari and P. Susheela
Music by: Vishwanathan-Ramamoorthy
Release information: From Idhayathil Nee (1963) · Lyricist: Mayavanathan
Explore this song
- Singer: L. R. Eswari and P. Susheela
- Film / album: Idhayathil Nee
- Composer: Vishwanathan-Ramamoorthy