Roman script

Singer : T. M. Soundararajan

Music by : V. Kumar

Lyrics by : Kumaradevan

Male Part

Annal gandhiyin vazhiyinilae

Vaikkam veerar thanthai periyaar nadanthaar

Thanthai periyaar paguththarivaal

Engal tamilmagan annaa valarnthaar

Male Part

Annaa meendum vara vendum

Anaivarum sirikum nilai vendum

Naadum veedum nalam kaana

Naalaiya thalaimurai sugam kaana

Annaa…..annaa…..enagal annaa……

Male Part

Yaezhai sirippinil iraivanai kaanbom

Enbathu nee sonna bodhanai

Yezhaigal sirikkum nilai varyum munnae

Maranthathuthaan perum sodhanai

Male Part

Eppothu nee pirappaai

Engal thuyaram thanippaai

Sendra idamthaan engae

Endru varuvaai ingae

Male Part

Annaa meendum vara vendum

Anaivarum sirikum nilai vendum

Male Part

Yaesuvin porumai budhanin karunai

Inainthathae vaazhnthathu unnidam

Igazhnthavar thammai vaazhnthidum ullam

Inimaen kaanbathu yaaridam

Male Part

Vaanaththai manathaal alanthaai

Vaazhvukku vazhiyaai nadanthaai

Naan enum ninaivai maruththaai

Naam enum uravai valarththaai

Male Part

Annaa meendum vara vendum

Anaivarum sirikum nilai vendum

Naadum veedum nalam kaana

Naalaiya thalaimurai sugam kaana

Annaa…..annaa…..enagal annaa……

தமிழ்

பாடகர் : டி. எம். சௌந்தரராஜன்

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : குமாரதேவன்

ஆண் : அண்ணல் காந்தியின் வழியினிலே

வைக்கம் வீரர் தந்தை பெரியார் நடந்தார்

தந்தை பெரியார் பகுத்தறிவால்

எங்கள் தமிழ்மகன் அண்ணா வளர்ந்தார்.......

ஆண் : அண்ணா மீண்டும் வர வேண்டும்

அனைவரும் சிரிக்கும் நிலை வேண்டும்

நாடும் வீடும் நலம் காண

நாளையத் தலைமுறை சுகம் காண

அண்ணா.........அண்ணா........எங்கள் அண்ணா.....

ஆண் : ஏழை சிரிப்பினில் இறைவனைக் காண்போம்

என்பது நீ சொன்ன போதனை

ஏழைகள் சிரிக்கும் நிலை வரும் முன்னே

மறைந்ததுதான் பெரும் சோதனை

ஆண் : எப்போது நீ பிறப்பாய்

எங்கள் துயரம் தணிப்பாய்

சென்ற இடம்தான் எங்கே

என்று வருவாய் இங்கே..........

ஆண் : அண்ணா மீண்டும் வர வேண்டும்

அனைவரும் சிரிக்கும் நிலை வேண்டும்

ஆண் : இயேசுவின் பொறுமை புத்தனின் கருணை

இணைந்தே வாழ்ந்தது உன்னிடம்

இகழ்ந்தவர் தம்மை வாழ்த்திடும் உள்ளம்

இனிமேல் காண்பது யாரிடம்

ஆண் : வானத்தை மனதால் அளந்தாய்

வாழ்வுக்கு வழியாய் நடந்தாய்

நான் எனும் நினைவை மறுத்தாய்

நாம் எனும் உறவை வளர்த்தாய்........

ஆண் : அண்ணா மீண்டும் வர வேண்டும்

அனைவரும் சிரிக்கும் நிலை வேண்டும்

நாடும் வீடும் நலம் காண

நாளையத் தலைமுறை சுகம் காண

அண்ணா.........அண்ணா........எங்கள் அண்ணா.....

Song information

Singer: T. M. Soundararajan

Music by: V. Kumar

Lyrics by: Kumaradevan

Release information: From Panakkara Penn (2015) · Singer: T. M. Soundararajan · Lyricist: Kumaradevan · Music: V. Kumar

Explore this song