Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by : K. V. Mahadevan

Lyrics by : Kannadasan

Male Part

Thanthai pinnae sellugindraan

Thanaiyan kaikkatti

Thannai maranthu vaadugiraal

Kanni maankutti

Male Part

Ventha ullam irandu pakkam

Vivaram theriyaamal

Devan potta ellaikkottin

Vilakkam puriyaamal

Male Part

Kadhal ennum paadhai

Adhu kadavul podum saalai

Kadhal ennum paadhai

Adhu kadavul podum saalai

Ellai kodugal engae

Athai iraivan sonnaan ingae

Male Part

Anbu kondu paarppatharkku

Kangal ellaikkodu

Aasai ennum dheepam yaettra

Ullam ellaikkodu

Ullam ellaikkodu

Male Part

Ennam yaavum ingae

Adhan ellaikkodugal engae

Vanna puruvam ingae

Adhan vaazhvum thaazhvum engae

Male Part

Vidhi enbaargal silaper

Seitha vinai enbaargal silaper

Edhu endraalum sarithaan

Idhan ellai pottavan iraivan

Male Part

Vidhi enbaargal silaper

Seitha vinai enbaargal silaper

Edhu endraalum sarithaan

Idhan ellai pottavan iraivan

Male Part

Irandu ullam serumpothu

Inbam ellaikkodu

Iraivan vanthu pirikkumpothu

Kanneer ellaikkodu

Male Part

Anbu kondu paarppatharkku

Kangal ellaikkodu

Aasai ennum dheepam yaettra

Ullam ellaikkodu

Ullam ellaikkodu

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : கே. வி. மகாதேவன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : தந்தை பின்னே செல்லுகின்றான்

தனையன் கைக்கட்டி......

தன்னை மறந்து வாடுகிறாள்

கன்னி மான்குட்டி

ஆண் : வெந்த உள்ளம் இரண்டு பக்கம்

விவரம் தெரியாமல்

தேவன் போட்ட எல்லைக்கோட்டின்

விளக்கம் புரியாமல்

ஆண் : காதல் என்னும் பாதை

அது கடவுள் போடும் சாலை

காதல் என்னும் பாதை

அது கடவுள் போடும் சாலை

எல்லைக் கோடுகள் எங்கே

அதை இறைவன் சொன்னான் இங்கே

ஆண் : அன்பு கொண்டு பார்ப்பதற்கு

கண்கள் எல்லைக்கோடு

ஆசை என்னும் தீபம் ஏற்ற

உள்ளம் எல்லைக்கோடு

உள்ளம் எல்லைக்கோடு

ஆண் : எண்ணம் யாவும் இங்கே

அதன் எல்லைக்கோடுகள் எங்கே

வண்ணப் புருவம் இங்கே

அதன் வாழ்வும் தாழ்வும் எங்கே

ஆண் : விதி என்பார்கள் சிலபேர்

செய்த வினை என்பார்கள் சிலபேர்

எது என்றாலும் சரிதான்

இதன் எல்லை போட்டவன் இறைவன்

ஆண் : விதி என்பார்கள் சிலபேர்

செய்த வினை என்பார்கள் சிலபேர்

எது என்றாலும் சரிதான்

இதன் எல்லை போட்டவன் இறைவன்

ஆண் : இரண்டு உள்ளம் சேரும்போது

இன்பம் எல்லைக்கோடு

இறைவன் வந்து பிரிக்கும்போது

கண்ணீர் எல்லைக்கோடு...

ஆண் : அன்பு கொண்டு பார்ப்பதற்கு

கண்கள் எல்லைக்கோடு

ஆசை என்னும் தீபம் ஏற்ற

உள்ளம் எல்லைக்கோடு

உள்ளம் எல்லைக்கோடு

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: K. V. Mahadevan

Lyrics by: Kannadasan

Release information: From Ellaikkodu (1972) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Kannadasan · Music: K. V. Mahadevan

Explore this song