Roman script

Singer : C. S. Jayaraman

Music by : C. Ramachandra

Male Part

Amma ammaa ammaaa endrae

Aayiram aandugal azhudhu purandaalum

Maganae annai varuvazhloo

Unakkoru aarudhal solvaalo.. annai varuvazhloo

Male Part

Immai thavam irundhu

Unnai munnoru naal sumandhu

Immai thavam irundhu

Unnai munnoru naal sumandhu

Ponnai polae unnai pottri valarthitta annai varuvaazhloo

Male Part

Kolli idavum vagai illai endrae nee

Kodunjiraiyil kalakkam kolladhae

Kolli idavum vagai illai endrae nee

Kodunjiraiyil kalakkam kolladhae

Alli ida arisi illai endraal ennaa anbai chorivaai maganae

Male Part

Kanneeraalae neeraattu

Annai thannai mann melae thaalattu

Kanneeraalae neeraattu

Annai thannai mann melae thaalattu

Nenja thanalaal neruppinai moottu

Nee un kadaimaiyai nilai naattu

Maganae annai varuvazhloo

Unakkoru aarudhal solvaalo.. annai varuvazhloo

தமிழ்

பாடகர் : சி. எஸ். ஜெயராமன்

இசையமைப்பாளர் : சி. இராமச்சந்திரா

ஆண் : அம்மா அம்மா என்றே

ஆயிரம் ஆண்டுகள் அழுது புரண்டாலும்

மகனே அன்னை வருவாளோ

உனக்கொரு ஆறுதல் சொல்வாளோ

அன்னை வருவாளோ....

ஆண் : முன்னை தவம் இருந்து

உன்னை முன்னூறு நாள் சுமந்து

முன்னை தவம் இருந்து

உன்னை முன்னூறு நாள் சுமந்து

பொன்னை போலே உன்னை

போற்றி வளர்த்திட்ட அன்னை வருவாளோ...

ஆண் : கொள்ளி இடவும் வகை இல்லை என்றே நீ

கொடுஞ்சிறையில் கலக்கம் கொள்ளாதே

கொள்ளி இடவும் வகை இல்லை என்றே நீ

கொடுஞ்சிறையில் கலக்கம் கொள்ளாதே

அள்ளி இட அரிசி இல்லை என்றால் என்ன

அன்பை சொரிவாய் மகனே......

ஆண் : கண்ணீராலே நீராட்டு

அன்னை தன்னை

மண் மேலே தாலாட்டு

கண்ணீராலே நீராட்டு

அன்னை தன்னை

மண் மேலே தாலாட்டு

நெஞ்ச தணலால் நெருப்பினை மூட்டு

நீ உன் கடமையை நிலை நாட்டு

மகனே அன்னை வருவாளோ

உனக்கொரு ஆறுதல் சொல்வாளோ

அன்னை வருவாளோ....

Song information

Singer: C. S. Jayaraman

Music by: C. Ramachandra

Release information: From Vanji Kottai Valipan (1958) · Lyricist: Kothamangalam Subbu

Explore this song