Roman script

Singers : T. M. Soundararajan and P. Susheela

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Velaalae vizhigal

Indru aalolam isaikkum

Siru noolaalae idaiyil

Manmathan senaigal manthiram paadidum

Manmathan senaigal manthiram paadidum

Female Part

Aa….aa…aa….aa…aa…aa….

Neerodu thaanaadum

Thaerodum thirunaal engae

Neerodu thaanaadum

Thaerodum thirunaal engae

Female Part

Malligai thaamarai thullidum melliya

Poopondra mangai ingae…aaaa……

Poopondra mangai ingae…

Manmathan saenaigal manthiram paadidum

Male : Manmathan saenaigal manthiram paadidum

Male Part

Velaalae vizhigal

Indru aalolam isaikkum

Male Part

Pattu selaiyil

Minnum ponnizhai

Paavai maeniyil aadum

Thottu thaavida thullum en manam

Kattu kaavaalai meerum

Female Part

Aa….aa….aa…aa…aa….

Kattum kai valai

Thottum mellisai

Mottum unnudan odum

Chittu kangalil vettum minnalum

Pattam pol vilaiyaadum

Male Part

Poovanna koondhal

En manjamaanaal

Poovanna koondhal

En manjamaanaal

Naan konjam paada nee konjam paada

Male : Manmathan saenaigal manthiram paadidum

Female : Manmathan saenaigal manthiram paadidum

Male Part

Velaalae vizhigal

Indru aalolam isaikkum

Female Part

Thanga sengani angam unnudan

Sangamam aavathu endru

Thingal mangaiyin sevvaai unnudan

Pongum naadagam endru

Male Part

Aa….aa…aa…aa…aa…

Thiththikkum oru muththu poochcharam

Thaththaikkae tharavendru

Siththam sonnathu vegam vanthathu

Niththam aayiram undu

Female Part

Paadungal innum

Thaalangal thullum

Paadungal innum

Thaalangal thullum

Koodungal endro pennullam sollum

Female : Manmathan saenaigal manthiram paadidum

Male : Manmathan saenaigal manthiram paadidum

Both : Velaalae vizhigal

Indru aalolam isaikkum

Male : Siru noolaalae idaiyil

Both : Manmathan saenaigal manthiram paadidum

தமிழ்

பாடகர்கள் : டி. எம். சௌந்தரராஜன் மற்றும் பி. சுஷீலா

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : வேலாலே விழிகள்

இன்று ஆலோலம் இசைக்கும்

சிறு நூலாலே இடையில்

மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

பெண் : ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ.....ஆ....

நீரோடு தானாடும்

தேரோடும் திருநாள் எங்கே

நீரோடு தானாடும்

தேரோடும் திருநாள் எங்கே

பெண் : மல்லிகை தாமரை துள்ளிடும் மெல்லிய

பூப்போன்ற மங்கை இங்கே ..ஆஆஆ...

பூப்போன்ற மங்கை இங்கே

மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

ஆண் : மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

பெண் : வேலாலே விழிகள்

இன்று ஆலோலம் இசைக்கும்

ஆண் : பட்டுச் சேலையில்

மின்னும் பொன்னிழை

பாவை மேனியில் ஆடும்

தொட்டுத் தாவிட துள்ளும் என் மனம்

கட்டுக் காவலை மீறும்

பெண் : ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ....

கட்டும் கை வளை

தொட்டும் மெல்லிசை

மொட்டும் உன்னுடன் ஓடும்

சிட்டுக் கண்களில் வெட்டும் மின்னலும்

பட்டம் போல் விளையாடும்

ஆண் : பூவண்ணக் கூந்தல்

என் மஞ்சமானால்

பூவண்ணக் கூந்தல்

என் மஞ்சமானால்

நான் கொஞ்சம் பாட நீ கொஞ்சம் பாட

ஆண் : மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

பெண் : மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

ஆண் : வேலாலே விழிகள்

இன்று ஆலோலம் இசைக்கும்

பெண் : தங்கச் செங்கனி அங்கம் உன்னுடன்

சங்கமம் ஆவது என்று

திங்கள் மங்கையின் செவ்வாய் உன்னுடன்

பொங்கும் நாடகம் என்று

ஆண் : ஆ....ஆ....ஆ.....ஆ....ஆ....

தித்திக்கும் ஒரு முத்துப் பூச்சரம்

தத்தைக்கே தரவென்று

சித்தம் சொன்னது வேகம் வந்தது

நித்தம் ஆயிரம் உண்டு

பெண் : பாடுங்கள் இன்னும்

தாளங்கள் துள்ளும்

பாடுங்கள் இன்னும்

தாளங்கள் துள்ளும்

கூடுங்கள் என்றோ பெண்ணுள்ளம் சொல்லும்

பெண் : மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

ஆண் : மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

இருவர் : வேலாலே விழிகள்

இன்று ஆலோலம் இசைக்கும்

ஆண் : சிறு நூலாலே இடையில்

இருவர் : மன்மதன் சேனைகள் மந்திரம் பாடிடும்

Song information

Singers: T. M. Soundararajan and P. Susheela

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Ennaipol Oruvan (1978) · Singer: T. M. Soundararajan and P. Susheela · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song