Roman script

Singer : Sriram Parthasarathy

Music by : Yuvan Shankar Raja

Male Part

Vaanthooral en tholgal melae

Vaalaattum naalae

Per iruttil en kangal meedhae

Minnum minminiyae

Male Part

Vidhaiyai puratti pottalum

Vinnai parthu thaan mulaikkum

Per anbinaal vazhkaiyin

Konalgal nerpadum

Male Part

Paruvam kadanthu ponalum

Arugampullu saagathu

Oor thooralil mothamaai

Patchaiyaai maaridum

Male Part

Vaanthooral en tholgal melae

Vaalaattum naalae

Per iruttil en kangal meedhae

Minnum minminiyae

Male Part

Aaaa…aaa..haaa…..

Haaa…aaaa…aaa…..

Nirisani dhanipa magamapa….

Nirisani dhanipa magamapa….

Male Part

Engae sendru veezhvathendru

Sinthum mazhai arinthathillai

Sondha bandham yaar vasam endru

Thedum uyir therinthathillai

Male Part

Megamattra vaanathin keezhae

Thagamuttra paravaiyai polae

Yedhumattru parantha podhum

Naadum thunaigal

Male Part

Eerapadham katril irunthaal

Thoorathilae kaadu therinthaal

Pakkam thaanae neer nilai endru

Pesum kuralgal

Male Part

Vaanthooral en tholgal melae

Vaalaattum naalae

Male Part

Mella thaanae sollum maarum

Solli thaanae sogam theerum

Vaazhum aasai ullaperkae

Vazhkai endrumae inikkum

Male Part

Oonappatta jeevan yedhum

Pattiniyaal saavathillai

Engo sellum erumbu kooda

Irai kodukkum

Male Part

Megam mattum vaanamillai

Dhegam mattum vazhkaiyillai

Pulangalai kadanthu kooda

Inbam irukkum

Male Part

Vaanthooral en tholgal melae

Vaalaattum naalae

Per iruttil en kangal meedhae

Minnum minminiyae

தமிழ்

பாடகர் : ஸ்ரீராம் பார்த்தசாரதி

இசையமைப்பாளர் : யுவன் சங்கர் ராஜா

ஆண் : வான்தூரல் என் தோள்கள் மேலே

வாலாட்டும் நாளே

பேர் இருட்டில் என் கண்கள் மீதே

மின்னும் மின்மினியே

ஆண் : விதையை புரட்டி போட்டாலும்

விண்ணை பார்த்து தான் முளைக்கும்

பேர் அன்பினால் வாழ்க்கையின்

கோணல்கள் நேர்படும்

ஆண் : பருவம் கடந்து போனாலும்

அருகம்புல்லு சாகாது

ஓர் தூரலில் மொத்தமாய்

பச்சையாய் மாறிடும்

ஆண் : வான்தூரல் என் தோள்கள் மேலே

வாலாட்டும் நாளே

பேர் இருட்டில் என் கண்கள் மீதே

மின்னும் மின்மினியே

ஆண் : ஆ.. ஆ.. ஆ..

ஆ.. ஆ... ஆ

நிரிசனி தனிப மகமப

நிரிசனி தனிப மகமப

ஆண் : எங்கே சென்று வீழ்வதென்று

சிந்தும் மழை அறிந்ததில்லை

சொந்த பந்தம் யார் வசம் என்று

தேடும் உயிர் தெரிந்ததில்லை

ஆண் : மேகமற்ற வானத்தின் கீழே

தாகம்முற்ற பறவையை போலே

ஏதுமற்று பறந்த போதும்

நாடும் துணைகள்

ஆண் : ஈரப்பதம் காற்றில் இருந்தால்

தூரத்திலே காடு தெரிந்தால்

பக்கம் தானே நீர் நிலை என்று

பேசும் குரல்கள்

ஆண் : வான்தூரல் என் தோள்கள்

மேலே வாலாட்டும் நாளே

ஆண் : மெல்ல தானே சொல்லும் மாறும்

சொல்லி தானே சோகம் தீரும்

வாழும் ஆசை உள்ளபேர்க்கே

வாழ்க்கை என்றுமே இனிக்கும்

ஆண் : ஊனப்பட்ட ஜீவன் ஏதும்

பட்டினியால் சாவதில்லை

எங்கோ செல்லும் எறும்பு கூட

இரை கொடுக்கும்

ஆண் : மேகம் மட்டும் வானமில்லை

தேகம் மட்டும் வாழ்க்கையில்லை

புலன்களை கடந்து கூட

இன்பம் இருக்கும்

ஆண் : வான்தூரல் என் தோள்கள் மேலே

வாலாட்டும் நாளே

பேர் இருட்டில் என் கண்கள் மீதே

மின்னும் மின்மினியே

Song information

Singer: Sriram Parthasarathy

Music by: Yuvan Shankar Raja

Release information: From Peranbu (2018) · Lyricist: Vairamuthu

Explore this song