Roman script

Singer : Bombay Jayashri

Music by : Ramesh Thamilmani

Lyrics by : Vairamuthu

Female Part

Rojave tamil pesu

Chediyil pootha natchathiramae

Sirippil ezhuthiya sithiramae

Chinnanjiru kaalam thaan

Nee vaazhvathu – aanal

Kaatril oru peru vaazhvu

Nee eluthi povadhu

Enganam unnaal aanadhu?

Female Part

Rojave tamil pesu

Rojave tamil pesu

Female Part

Vaan koduthaalam

Vinmeen pothum

Mann koduthaalum

Malar ondru pothum

Kadal koduthaalum

Meen ondru pothum

Female Part

Periyathu ellaam

Perum porul illai

Siriyathu ellaam

Siru porul illai

Payangalai poruthae

Porulgalin ellai

Female Part

Rojave tamil pesu

Rojave tamil pesu

Female Part

Veyilukku thannai

Virundhu vaithaalum

Muyalukku dhaagam

Theerthu vaithaalum

Panithuli vaazhvu

Pooranamaagum

Female Part

Thodangiya vaazhvai

Azhagu seidhaalum

Adangiya vaazhvai

Amaidhi seidhaalum

Malargalin vaazhvu

Pooranamaagum

Female Part

Rojave tamil pesu

Rojave tamil pesu

Female Part

Chediyil pootha natchathiramae

Sirippil ezhuthiya sithiramae

Chinnanjiru kaalam thaan

Nee vaazhvathu- aanal

Kaatril oru peru vaazhvu

Nee eluthi povadhu

Enganam unnaal aanadhu?

தமிழ்

பாடகி : பாம்பே ஜெயஸ்ரீ

இசை அமைப்பாளர் : ரமேஷ் தமிழ்மணி

பாடல் ஆசிரியர் : வைரமுத்து

பெண் : ரோஜாவே தமிழ் பேசு

செடியில் பூத்த நட்சத்திரமே

சிரிப்பில் எழுதிய சித்திரமே

சின்னஞ்சிறு காலம்தான்

நீ வாழ்வது – ஆனால்

காற்றில் ஒரு பெருவாழ்வு

நீயெழுதிப் போவது

எங்ஙனம் உன்னால் ஆனது?

பெண் : ரோஜாவே தமிழ் பேசு

ரோஜாவே தமிழ் பேசு

பெண் : வான் கொடுத்தாலும்

விண்மீன் போதும்

மண் கொடுத்தாலும்

மலரொன்று போதும்

கடல் கொடுத்தாலும்

மீன்ஒன்று போதும்

பெண் : பெரியது எல்லாம்

பெரும்பொருள் இல்லை

சிறியது எல்லாம்

சிறுபொருள் இல்லை

பயன்களைப் பொறுத்தே

பொருள்களின் எல்லை

பெண் : ரோஜாவே தமிழ் பேசு

ரோஜாவே தமிழ் பேசு

பெண் : வெயிலுக்குத் தன்னை

விருந்து வைத்தாலும்

முயலுக்கு தாகம்

தீர்த்து வைத்தாலும்

பனித்துளி வாழ்வு

பூரணமாகும்

பெண் : தொடங்கிய வாழ்வை

அழகு செய்தாலும்

அடங்கிய வாழ்வை

அமைதி செய்தாலும்

மலர்களின் வாழ்வு

பூரணமாகும்

பெண் : ரோஜாவே தமிழ் பேசு

ரோஜாவே தமிழ் பேசு

பெண் : செடியில் பூத்த நட்சத்திரமே

சிரிப்பில் எழுதிய சித்திரமே

சின்னஞ்சிறு காலம்தான்

நீ வாழ்வது – ஆனால்

காற்றில் ஒரு பெருவாழ்வு

நீயெழுதிப் போவது

எங்ஙனம் உன்னால் ஆனது?

Song information

Singer: Bombay Jayashri

Music by: Ramesh Thamilmani

Lyrics by: Vairamuthu

Release information: From Naatpadu Theral 2 (2022) · Singer: Bombay Jayashri · Lyricist: Vairamuthu · Music: Ramesh Thamilmani

Explore this song