Roman script

Singer : K.S. Chithra

                 Music by : Bharathwaj

Female Part

{ Ovvoru pookalumae solkiradhae

Vaazhvendral poraadum porkalamae } (2)

Ovvoru vidiyalumae solgiradhae

Iravanaal pagal ondru vanthidumae

Female Part

Nambikai enbathu vendum nam vaazhvil

Latchiyam nichayam vellum oru naalil

Manamae oh manamae nee maarividu

Malaiyo adhu paniyo nee mothividu

Female Part

………………………………………

Female Part

Ullam endrum eppothum

Udainthu poga kudaathu

Enna indha vaazhkai endra

Ennam thondra kudaathu

Female Part

Endha manitha nenjukul

Kaayam illai sollungal

Kaalapokil kaayamellaam

Marainthu pogum maayangal

Female Part

Uzhi thaangum karkal thaanae

Manmeethu silaiyaagum

Vali thaangum ullam thaanae

Nilaiyaana sugam kaanum

Female Part

Yaarukillai poraatam

Kannil enna neerotam

Oru kanavu kandaal

Adhai thinam muyandraal

Oru naalil nijamaagum

Female Part

Manamae oh manamae nee maarividu

Malaiyo adhu paniyo nee mothividu

Female Part

Ovvoru pookalumae solkiradhae

Vaazhvendral poraadum porkalamae

Female Part

Vaazhkai kavidhai vaasipom

Vaanam alavu yosipom

Muyarchi endra ondrai matum

Moochu polae swaasipom

Female Part

Latcham kanavu kannodu

Latchiyangal nenjodu

Unnai vella yaarum illai

Uruthiyodu poraadu

Female Part

Manithaa un manathai keeri

Vithai podu maramaagum

Avamaanam padutholvi

Ellamae uravaagum

Female Part

Tholvi indri varalaaraa

Thukam enna en thozha

Oru mudivirunthaal adhil thelivirunthaal

Andha vaanam vasamaagum

Female Part

Manamae oh manamae nee maarividu

Malaiyo adhu paniyo nee mothividu

Female Part

Ovvoru pookalumae solkiradhae

Vaazhvendral poraadum porkalamae

Ovvoru vidiyalumae solgiradhae

Iravanaal pagal ondru vanthidumae

Female Part

Nambikai enbathu vendum nam vaazhvil

Latchiyam nichayam vellum oru naalil

Manamae oh manamae nee maarividu

Malaiyo adhu paniyo nee mothividu

தமிழ்

பாடகி : கே.எஸ். சித்ரா

இசையமைப்பாளா் : பரத்வாஜ்

பெண் : { ஒவ்வொரு பூக்களுமே

சொல்கிறதே வாழ்வென்றால்

போராடும் போா்க்களமே } (2)

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே

இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

பெண் : நம்பிக்கை என்பது

வேண்டும் நம் வாழ்வில்

லட்சியம் நிச்சயம் வெல்லும்

ஒரு நாளில் மனமே ஓ மனமே

நீ மாறிவிடு மலையோ அது

பனியோ நீ மோதி விடு

பெண் : .....................................

பெண் : உள்ளம் என்றும்

எப்போதும் உடைந்து போகக்

கூடாது என்ன இந்த வாழ்க்கையென்ற

எண்ணம் தோன்றக் கூடாது

பெண் : எந்த மனிதன் நெஞ்சுக்குள்

காயம் இல்லை சொல்லுங்கள்

காலப்போக்கில் காயமெல்லாம்

மறைந்து போகும் மாயங்கள்

பெண் : உளி தாங்கும் கற்கள்

தானே மண்மீது சிலையாகும்

வலி தாங்கும் உள்ளம் தானே

நிலையான சுகம் காணும்

பெண் : யாருக்கில்லை போராட்டம்

கண்ணில் என்ன நீரோட்டம் ஒரு

கனவு கண்டால் அதை தினம்

முயன்றால் ஒரு நாளில் நிஜமாகும்

பெண் : மனமே ஓ மனமே

நீ மாறிவிடு மலையோ அது

பனியோ நீ மோதி விடு

பெண் : ஒவ்வொரு பூக்களுமே

சொல்கிறதே வாழ்வென்றால்

போராடும் போா்க்களமே

பெண் : வாழ்க்கை கவிதை

வாசிப்போம் வானம் அளவு

யோசிப்போம் முயற்சி என்ற

ஒன்றை மட்டும் மூச்சு போல

சுவாசிப்போம்

பெண் : லட்சம் கனவு

கண்ணோடு லட்சியங்கள்

நெஞ்சோடு உன்னை வெல்ல

யாருமில்லை உறுதியோடு போராடு

பெண் : மனிதா உன் மனதை

கீறி விதை போடு மரமாகும்

அவமானம் படுதோல்வி

எல்லாமே உரமாகும்

பெண் : தோல்வியின்றி வரலாறா

துக்கம் என்ன என் தோழா ஒரு

முடிவிருந்தால் அதில் தெளிவிருந்தால்

அந்த வானம் வசமாகும்

பெண் : மனமே ஓ மனமே

நீ மாறிவிடு மலையோ அது

பனியோ நீ மோதி விடு

பெண் : ஒவ்வொரு பூக்களுமே

சொல்கிறதே வாழ்வென்றால்

போராடும் போா்க்களமே

ஒவ்வொரு விடியலுமே சொல்கிறதே

இரவானால் பகல் ஒன்று வந்திடுமே

பெண் : நம்பிக்கை என்பது

வேண்டும் நம் வாழ்வில்

லட்சியம் நிச்சயம் வெல்லும்

ஒரு நாளில் மனமே ஓ மனமே

நீ மாறிவிடு மலையோ அது

பனியோ நீ மோதி விடு

Song information

Singer: K.S. Chithra

Music by: Bharathwaj

Release information: From Autograph (2004) · Lyricist: Pa.Vijay

Explore this song