Roman script

Singer : K. Veeramani

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Mannil nalla vannam vaazhalaam vaigalum

Ennil nalla kathikku yaathumor kuraivillai

Kannil nallaathoorum kazhumala valanagar

Pennin nallaalodum perunthagai irunthathae

Chorus

Oradi kadavulukaaga oradi kanavarkkaaga

Seeradi moondraam paadham saernththor kulaththai kaakka

Naaladi achcham naanam madam enum nalaththai kaakka

Ainthadi pulangal ainthai adakkiyae vaazhvai kaakka

Aaradi suvaigal aarum kanavarkkae anbil ootta

Yazhadi ulagam yezhum kanavanodu inainthu vaazha

Chorus

Sapthpathi saththiyam dharmakula thaththuvam

Sapthpathi saththiyam dharmakula thaththuvam

Saththiyam thaththuvam……saththiyam thaththuvam

Chorus

Sakthi oru paathiyaai sivamum oru paathiyaai

Dharmaththil inainthu vaazhvom

Thaaimai enum kolamaai thanthai enum paalamaai

Thaththuva perumai kaanbom

Chorus

Bakthivazhi nermaiyaai panbuvazhi menmaiyaai

Vaazhalaam vananga vaazhvom

Palliyarai kolvathil paramanadi saervathil

Pakkaththil pangu kolvom

Chorus

Paathaathi kesamum seeraana naayagan panikkendru

Thunaivi vaazhga

Varuvathoru thuyareninum varuvathoru sugameninum

Paathiyaai thunaivan vaazhga

Chorus

Thaai veedu vittappin than veedu

Thaai veedu endrenniyae thalaivu vaazhga

Naatkaalai yogamithu kadhikaalaiyaagamena

Samsaaram inithu vaazhga

தமிழ்

பாடகர் : கே. வீரமணி

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : மண்ணில் நல்ல வண்ணம் வாழலாம் வைகலும்

எண்ணில் நல்ல கதிக்கு யாதுமோர் குறைவில்லை

கண்ணில் நல்லஃதுறும் கழுமல வளநகர்ப்

பெண்ணின் நல்லாளொடும் பெருந்தகை இருந்ததே.

குழு : ஓரடி கடவுளுக்காக ஓரடி கணவர்க்காக

சீரடி மூன்றாம் பாதம் சேர்ந்ததோர் குலத்தைக் காக்க

நாலடி அச்சம் நாணம் மடம் எனும் நலத்தை காக்க

ஐந்தடி புலன்கள் ஐந்தை அடக்கியே வாழ்வை காக்க

ஆறடி சுவைகள் ஆறும் கணவர்க்கே அன்பில் ஊட்ட

ஏழடி உலகம் ஏழும் கணவனோடு இணைந்து வாழ

குழு : சப்தபதி சத்தியம் தர்மகுல தத்துவம்

சப்தபதி சத்தியம் தர்மகுல தத்துவம்

சத்தியம்.......தத்துவம்........ சத்தியம்.........தத்துவம்..........

குழு : சக்தி ஒரு பாதியாய் சிவமும் ஒரு பாதியாய்

தர்மத்தில் இணைந்து வாழ்வோம்

தாய்மை எனும் கோலமாய் தந்தை எனும் பாலமாய்

தத்துவ பெருமை காண்போம்

குழு : பக்திவழி நேர்மையாய் பண்புவழி மேன்மையாய்

வாழலாம் வணங்க வாழ்வோம்

பள்ளியறை கொள்வதில் பரமனடி சேர்வதில்

பக்கத்தில் பங்கு கொள்வோம்

குழு : பாதாதி கேசமும் சீரான நாயகன் பணிக்கென்று

துணைவி வாழ்க

வருவதொரு துயரெனினும் வருவதொரு சுகமெனினும்

பாதியாய் துணைவன் வாழ்க

குழு : தாய் வீடு விட்டப்பின் தன் வீடு

தாய் வீடு என்றெண்ணியே தலைவி வாழ்க

நாட்காலை யோகமிது கதிகாலையாகமென

சம்சாரம் இனிது வாழ்க

Song information

Singer: K. Veeramani

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Lalitha (1976) · Singer: K. Veeramani · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song