Roman script

Singer : P. Leela

Music by : T. Chalapathi Rao

Lyrics by : Kannadasan

Humming : .…………….

Female Part

Paal kodutha thanangal sollum

Paarthiruntha kangal sollum

Sollukku porul ariyaar

Sollivittu odi vittar

Sollivittu odi vittar

Female Part

Nee thaaiyum illaiyaam

Avan saeiyum illaiyaam

Nee thaaiyum illaiyaam

Avan saeiyum illaiyaam

Sattathilae

Avar sattathilae

Ungal sondham kaanvillaiyaam

Nee thaaiyum illaiyaam

Avan saeiyum illaiyaam

Female Part

Pasuvai kooda annai endru

Paadam solgiraar

Than paal koduthu valarthaval

Thaaiyillai engiraar

Pasuvai kooda annai endru

Paadam solgiraar

Than paal koduthu valarthaval

Thaaiyillai engiraar

Female Part

Pillai kandru pola kadharum podhu

Thookki selgiraar

Ini karpanaiyil maganai kandu

Pesa solgiraar

Nee thaaiyum illaiyaam

Avan saeiyum illaiyaam

Female Part

Nee poovilandhu pottilandhu

Pona naalilae

Unai porumai kolla sonna

Pillai karuvil irundhaan

Nee poovilandhu pottilandhu

Pona naalilae

Unai porumai kolla sonna

Pillai karuvil irundhaan

Female Part

Nee kann thirandhu paartha podhu

Kaiyil irundhaan

Andru kandathellam kanavai pola

Odi marainthaan

Nee thaaiyum illaiyaam

Avan saeiyum illaiyaam

Female Part

Anbariyaa manidhar unnai

Aadavum vaithaar

Nee aadum bothu medai yeri

Kaalai murithaar

Anbariyaa manidhar unnai

Aadavum vaithaar

Nee aadum bothu medai yeri

Kaalai murithaar

Female Part

Nee kannizhandha velaiyilae

Kangal koduthaar

Nee kaanum varai paarthirunthu

Kannai parithaar

Nee thaaiyum illaiyaam

Avan saeiyum illaiyaam

தமிழ்

பாடகி : பி. லீலா

இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

முனங்கல் : .................

பெண் : பால் கொடுத்த தனங்கள் சொல்லும்

பார்த்திருந்த கண்கள் சொல்லும்

சொல்லுக்குப் பொருளறியார்

சொல்லிவிட்டு ஓடி விட்டார்

சொல்லிவிட்டு ஓடி விட்டார்

பெண் : நீ தாயுமில்லையாம்

அவன் சேயுமில்லையாம்

நீ தாயுமில்லையாம்

அவன் சேயுமில்லையாம்

சட்டத்திலே

அவர் சட்டத்திலே

உங்கள் சொந்தம் காணவில்லையாம்..

நீ தாயுமில்லையாம்

அவன் சேயுமில்லையாம்

பெண் : பசுவைக் கூட அன்னையென்று

பாடம் சொல்கிறார்

தன் பால் கொடுத்து வளர்த்தவள்

தாயில்லை என்கிறார்

பசுவைக் கூட அன்னையென்று

பாடம் சொல்கிறார்

தன் பால் கொடுத்து வளர்த்தவள்

தாயில்லை என்கிறார்

பெண் : பிள்ளை கன்று போல கதறும்போது

தூக்கிச் செல்கிறார் இனி

கற்பனையில் மகனைக் கண்டு

பேசச் சொல்கிறார்........

நீ தாயுமில்லையாம்

அவன் சேயுமில்லையாம்

பெண் : நீ பூவிழந்து பொட்டிழந்து

போன நாளிலே

உனை பொறுமை கொள்ள சொன்ன

பிள்ளை கருவிலிருந்தான்..

நீ பூவிழந்து பொட்டிழந்து

போன நாளிலே

உனை பொறுமை கொள்ள சொன்ன

பிள்ளை கருவிலிருந்தான்..

பெண் : நீ கண் திறந்து பார்த்தபோது

கையில் இருந்தான்

அன்று கண்டதெல்லாம் கனவு போல

ஓடி மறைந்தான்.......

நீ தாயுமில்லையாம்

அவன் சேயுமில்லையாம்

பெண் : அன்பறியா மனிதர் உன்னை

ஆடவும் வைத்தார்

நீ ஆடும்போது மேடை ஏறி

காலை முறித்தார்

அன்பறியா மனிதர் உன்னை

ஆடவும் வைத்தார்

நீ ஆடும்போது மேடை ஏறி

காலை முறித்தார்

பெண் : நீ கண்ணிழந்த வேளையிலே

கண்கள் கொடுத்தார்

நீ காணும் வரை பார்த்திருந்து

கண்ணைப் பறித்தார்...,..

நீ தாயுமில்லையாம்

அவன் சேயுமில்லையாம்

Song information

Singer: P. Leela

Music by: T. Chalapathi Rao

Lyrics by: Kannadasan

Release information: From Anbu Magan (1961) · Singer: P. Leela · Lyricist: Kannadasan · Music: T. Chalapathi Rao

Explore this song