Roman script
Singer : P. Leela Music by : T. Chalapathi Rao Lyrics by : Kannadasan Humming : .……………. Female Part Paal kodutha thanangal sollum Paarthiruntha kangal sollum Sollukku porul ariyaar Sollivittu odi vittar Sollivittu odi vittar Female Part Nee thaaiyum illaiyaam Avan saeiyum illaiyaam Nee thaaiyum illaiyaam Avan saeiyum illaiyaam Sattathilae Avar sattathilae Ungal sondham kaanvillaiyaam Nee thaaiyum illaiyaam Avan saeiyum illaiyaam Female Part Pasuvai kooda annai endru Paadam solgiraar Than paal koduthu valarthaval Thaaiyillai engiraar Pasuvai kooda annai endru Paadam solgiraar Than paal koduthu valarthaval Thaaiyillai engiraar Female Part Pillai kandru pola kadharum podhu Thookki selgiraar Ini karpanaiyil maganai kandu Pesa solgiraar Nee thaaiyum illaiyaam Avan saeiyum illaiyaam Female Part Nee poovilandhu pottilandhu Pona naalilae Unai porumai kolla sonna Pillai karuvil irundhaan Nee poovilandhu pottilandhu Pona naalilae Unai porumai kolla sonna Pillai karuvil irundhaan Female Part Nee kann thirandhu paartha podhu Kaiyil irundhaan Andru kandathellam kanavai pola Odi marainthaan Nee thaaiyum illaiyaam Avan saeiyum illaiyaam Female Part Anbariyaa manidhar unnai Aadavum vaithaar Nee aadum bothu medai yeri Kaalai murithaar Anbariyaa manidhar unnai Aadavum vaithaar Nee aadum bothu medai yeri Kaalai murithaar Female Part Nee kannizhandha velaiyilae Kangal koduthaar Nee kaanum varai paarthirunthu Kannai parithaar Nee thaaiyum illaiyaam Avan saeiyum illaiyaam
தமிழ்
பாடகி : பி. லீலா இசை அமைப்பாளர் : டி. சலபதி ராவ் பாடல் ஆசிரியர் : கண்ணதாசன் முனங்கல் : ................. பெண் : பால் கொடுத்த தனங்கள் சொல்லும் பார்த்திருந்த கண்கள் சொல்லும் சொல்லுக்குப் பொருளறியார் சொல்லிவிட்டு ஓடி விட்டார் சொல்லிவிட்டு ஓடி விட்டார் பெண் : நீ தாயுமில்லையாம் அவன் சேயுமில்லையாம் நீ தாயுமில்லையாம் அவன் சேயுமில்லையாம் சட்டத்திலே அவர் சட்டத்திலே உங்கள் சொந்தம் காணவில்லையாம்.. நீ தாயுமில்லையாம் அவன் சேயுமில்லையாம் பெண் : பசுவைக் கூட அன்னையென்று பாடம் சொல்கிறார் தன் பால் கொடுத்து வளர்த்தவள் தாயில்லை என்கிறார் பசுவைக் கூட அன்னையென்று பாடம் சொல்கிறார் தன் பால் கொடுத்து வளர்த்தவள் தாயில்லை என்கிறார் பெண் : பிள்ளை கன்று போல கதறும்போது தூக்கிச் செல்கிறார் இனி கற்பனையில் மகனைக் கண்டு பேசச் சொல்கிறார்........ நீ தாயுமில்லையாம் அவன் சேயுமில்லையாம் பெண் : நீ பூவிழந்து பொட்டிழந்து போன நாளிலே உனை பொறுமை கொள்ள சொன்ன பிள்ளை கருவிலிருந்தான்.. நீ பூவிழந்து பொட்டிழந்து போன நாளிலே உனை பொறுமை கொள்ள சொன்ன பிள்ளை கருவிலிருந்தான்.. பெண் : நீ கண் திறந்து பார்த்தபோது கையில் இருந்தான் அன்று கண்டதெல்லாம் கனவு போல ஓடி மறைந்தான்....... நீ தாயுமில்லையாம் அவன் சேயுமில்லையாம் பெண் : அன்பறியா மனிதர் உன்னை ஆடவும் வைத்தார் நீ ஆடும்போது மேடை ஏறி காலை முறித்தார் அன்பறியா மனிதர் உன்னை ஆடவும் வைத்தார் நீ ஆடும்போது மேடை ஏறி காலை முறித்தார் பெண் : நீ கண்ணிழந்த வேளையிலே கண்கள் கொடுத்தார் நீ காணும் வரை பார்த்திருந்து கண்ணைப் பறித்தார்...,.. நீ தாயுமில்லையாம் அவன் சேயுமில்லையாம்
Song information
Singer: P. Leela
Music by: T. Chalapathi Rao
Lyrics by: Kannadasan
Release information: From Anbu Magan (1961) · Singer: P. Leela · Lyricist: Kannadasan · Music: T. Chalapathi Rao
Explore this song
- Singer: P. Leela
- Film / album: Anbu Magan
- Composer: T. Chalapathi Rao
- Lyricist: Kannadasan