Roman script

Nadhi Ondru Song Lyrics is a track from Nadhi Ondru Karai Moondru Tamil Film – 1981, Starring Sudhakar, Mohan Sharma, Thirumurugan, Goundamani, Radhika, Sachchu and Raasi.  This song was sung by T. L. Maharajan and the music was composed by M. S. Vishwanathan. Lyrics works are penned by Kannadasan.

Singer : T. L. Maharajan

Music Director : M. S. Vishwanathan

Lyricist : Kannadasan

Male Part

Nadhi ondru karai moondru

Naayaganin vilaiyaadal

Oru moondru idhayangal

Paaduvadhu oru paadal

Male Part

Kavi ezhudhi paarkkudhamma

Kannaaru kann aaru

Kanniyival azhaginukkae

Kannaeru kannaeru

Male Part

Nadhi ondru karai moondru

Naayaganin vilaiyaadal

Oru moondru idhayangal

Paaduvadhu oru paadal

Male Part

Sengumadha pani vaayil

Thaen sidharum ponn aruvi

Thendralilae parandhapadi

Rasikkudhamma oru kuruvi

Male Part

Ponghi varum kadal nurai pol

Poothu nirkum paer azhagi

Bodhaiyilae midhakkudhamma

Paavaiyaval paer ezhudhi

Male Part

Nadhi ondru karai moondru

Naayaganin vilaiyaadal

Oru moondru idhayangal

Paaduvadhu oru paadal

Male Part

Kootinilae irundhapadi

Kulavudhamma maada pura

Kaatinilae ulavudhamma

Kaadhalikkum jodi puraa

Male Part

Theetudhamma oviyathai

Thaedi nirkkum vanna puraa

Saevai seiya parakkudhamma

Vayal veliyil chinnapuraa

Male Part

Paruvam vandha sirukadhaiyai

Yaar eludhi mudippaaro

Paal vadiyum thamaraiyai

Yaar inimael paripaaroo

Male Part

Moovarilae evar inimael

Nadhiyinilae kulippaaroo

Mogathilae mei maranthu

Karaiyinil yaar nirpaaroo

Male Part

Nadhi ondru karai moondru

Naayaganin vilaiyaadal

Oru moondru idhayangal

Paaduvadhu oru paadal

தமிழ்

பாடகர் : டி. எல். மகாராஜன்

இசை அமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடல் ஆசிரியர் : கண்ணதாசன்

ஆண் : நதி ஒன்று கரை மூன்று

நாயகனின் விளையாடல்

ஒரு மூன்று இதயங்கள்

பாடுவது ஒரு பாடல்

ஆண் : கவி எழுதி பார்க்குதம்மா

கண்ணாறு கண் ஆறு

கன்னியிவள் அழகினுக்கே

கண்ணேறு கண்ணேறு.....

ஆண் : நதி ஒன்று கரை மூன்று

நாயகனின் விளையாடல்

ஒரு மூன்று இதயங்கள்

பாடுவது ஒரு பாடல்

ஆண் : செங்குமத பனி வாயில்

தேன் சிதறும் பொன்னருவி

தென்றலிலே பறந்தபடி

ரசிக்குதம்மா ஒரு குருவி

ஆண் : பொங்கி வரும் கடல் நுரை போல்

பூத்து நிற்கும் பேரழகி

போதையிலே மிதக்குதம்மா

பாவையவள் பேரெழுதி.....

ஆண் : நதி ஒன்று கரை மூன்று

நாயகனின் விளையாடல்

ஒரு மூன்று இதயங்கள்

பாடுவது ஒரு பாடல்

ஆண் : கூட்டினிலே இருந்தபடி

குலவுதம்மா மாடப்புறா

காட்டினிலே உலவுதம்மா

காதலிக்கும் ஜோடி புறா

ஆண் : தீட்டுதம்மா ஓவியத்தை

தேடி நிற்கும் வண்ணப்புறா

சேவை செய்ய பறக்குதம்மா

வயல் வெளியில் சின்னப்புறா

ஆண் : பருவம் வந்த சிறுகதையை

யார் எழுதி முடிப்பாரோ

பால் வடியும் தாமரையை

யார் இனிமேல் பறிப்பாரோ

ஆண் : மூவரிலே எவர் இனிமேல்

நதியினிலே குளிப்பாரோ

மோகத்திலே மெய் மறந்து

கரையினில் யார் நிற்பாரோ...

ஆண் : நதி ஒன்று கரை மூன்று

நாயகனின் விளையாடல்

ஒரு மூன்று இதயங்கள்

பாடுவது ஒரு பாடல்

Song information

Singer: T. L. Maharajan

Release information: From Nadhi Ondru Karai Moondru (1981) · Singer: T. L. Maharajan · Lyricist: Kannadasan · Music: M. S. Vishwanathan

Explore this song