Roman script
Singer : Vani Jairam Music by : M. S. Viswanathan Lyrics by : Kannadasan Male Part ……………….. Female Part Malai rani munthaanai sariya sariya Mann maathaa vannamadu viriya viriya Ilangaatru maarbagathai thazhuva thazhuva Ennugindren kavithai ondru ezhutha ezhutha Female Part Malai rani munthaanai sariya sariya Mann maathaa vannamadu viriya viriya Ilangaatru maarbagathai thazhuva thazhuva Ennugindren kavithai ondru ezhutha ezhutha Female Part Kadhal vitta moochu ondru Perugi perugi kaattraagi Kadhaliyin kanneerthaan Urugi urugi neeraagi Female Part Megam ennum thozhi vanthu Kaniya kaniya mozhi pesi Megam ennum thozhi vanthu Kaniya kaniya mozhi pesi Thaayai vittu odi sellum Pennai pola nazhuvi Female Part Medai vittu aadi thullum Menmaithaano aruvi Medai vittu aadi thullum Menmaithaano aruvi Female Part Malai rani munthaanai sariya sariya Male : Lalala lalala Female : Mann maathaa vannamadu viriya viriya Male : Lalala lalala Female : Ilangaatru maarbagathai thazhuva thazhuva Male : Lalala lalala Female : Ennugindren kavithai ondru ezhutha ezhutha Female Part Poo vizhuntha maathiriyae Mayangi mayangi vizh vendum Pottu vaiththa kulamagal pol Thayangi thayangi vara vendum Female Part Nee nadakkum vazhiyinilae Thavazhnthu thavazhnthu selvaayo Nee nadakkum vazhiyinilae Thavazhnthu thavazhnthu selvaayo Female Part Engae vanthaai engae selvaai Intha pennae thozhi Entha penmau unnai polae Inbam kondaen vaazhi Female Part Malai rani munthaanai sariya sariya Male : Lalala lalala Female : Mann maathaa vannamadu viriya viriya Male : Lalala lalala Female : Ilangaatru maarbagathai thazhuva thazhuva Male : Lalala lalala Female : Ennugindren kavithai ondru ezhutha ezhutha
தமிழ்
பாடகி : வாணி ஜெய்ராம் இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன் பாடலாசிரியர் : கண்ணதாசன் ஆண் : ...................... பெண் : மலை ராணி முந்தானை சரிய சரிய மண் மாதா வண்ணமடி விரிய விரிய இளங்காற்று மார்பகத்தை தழுவ தழுவ எண்ணுகின்றேன் கவிதை ஒன்று எழுத எழுத..... பெண் : மலை ராணி முந்தானை சரிய சரிய மண் மாதா வண்ணமடி விரிய விரிய இளங்காற்று மார்பகத்தை தழுவ தழுவ எண்ணுகின்றேன் கவிதை ஒன்று எழுத எழுத..... பெண் : காதல் விட்ட மூச்சு ஒன்று பெருகி பெருகி காற்றாகி காதலியின் கண்ணீர் தான் உருகி உருகி நீராகி பெண் : மேகம் என்னும் தோழி வந்து கனிய கனிய மொழி பேசி மேகம் என்னும் தோழி வந்து கனிய கனிய மொழி பேசி தாயை விட்டு ஓடி செல்லும் பெண்ணை போல நழுவி பெண் : மேடை விட்டு ஆடி துள்ளும் மென்மை தானோ அருவி, மேடை விட்டு ஆடி துள்ளும் மென்மை தானோ அருவி..... பெண் : மலை ராணி முந்தானை சரிய சரிய ஆண் : லலல லலல பெண் : மண் மாதா வண்ணமடி விரிய விரிய ஆண் : லலல லலல பெண் : இளங்காற்று மார்பகத்தை தழுவ தழுவ ஆண் : லலல லலல பெண் : எண்ணுகின்றேன் கவிதை ஒன்று எழுத எழுத..... பெண் : பூ விழுந்த மாதிரியே மயங்கி மயங்கி விழ வேண்டும் பொட்டு வைத்த குலமகள் போல் தயங்கி தயங்கி வர வேண்டும் பெண் : நீ நடக்கும் வழியினிலே தவழ்ந்து தவழ்ந்து செல்வாயோ நீ நடக்கும் வழியினிலே தவழ்ந்து தவழ்ந்து செல்வாயோ பெண் : எங்கே வந்தாய் எங்கே செல்வாய் இந்த பெண்ணே தோழி எந்தன் பெண்மை உன்னை போலே இன்பம் கொண்டேன் வாழி... பெண் : மலை ராணி முந்தானை சரிய சரிய ஆண் : லலல லலல பெண் : மண் மாதா வண்ணமடி விரிய விரிய ஆண் : லலல லலல பெண் : இளங்காற்று மார்பகத்தை தழுவ தழுவ ஆண் : லலல லலல பெண் : எண்ணுகின்றேன் கவிதை ஒன்று எழுத எழுத.....
Song information
Singer: Vani Jairam
Music by: M. S. Viswanathan
Lyrics by: Kannadasan
Release information: From Ore Vanam Ore Boomi (1979) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan
Explore this song
- Singer: Vani Jairam
- Film / album: Ore Vanam Ore Boomi
- Composer: M. S. Viswanathan
- Lyricist: Kannadasan