Roman script

Singers : Prabhu and Sreeja

Music by : A. R. Rahman

Female Part

Kavithaikku porul thandha

Kalaivaani neeyaa

En kanavodu ketkindra

Kaarsalangai neeyaa

Pechukku uyir thandha

Sapthangal neeyaa

Ennai pesaamal seigindra

Mounangal neeyaa

Female Part

Saththangal illaadha

Sangeetham neeyaa

Ennai saagaamal seigindra

Sanjeevi neeyaa

Paruvathin thottathil

Mudhal poovum neeyaa

En paalaivanam kaangindra

Mudhal mazhaiyum neeyaa

Male Part

Iravodu naan kaanum

Oli vattam needhaan

En iru kannil therigindra

Oru kaatchi needhaan

Male Part

Vaarthaikkul oodaadum

Ul artham needhaan

En vaadhiyathil isaiyaagum

Uyir moochum needhaan

Male Part

Thoorathil mayil iragaal

Thottavalum needhaan

En pakkathil agniyaai

Suttavalum needhaan

Male Part

Kaadhalukku kan thirandhu

Vaiththavalum needhaan

Naan kaadhaliththaal

Kan moodi kondavalum needhaan

தமிழ்

பாடகர்கள் : பிரபு மற்றும் ஸ்ரீஜா

இசை அமைப்பாளர் : ஏ . ஆர் . ரஹ்மான்

பெண் : கவிதைக்கு பொருள் தந்த

கலைவாணி நீயா

என் கனவோடு கேட்கின்ற

காற்சலங்கை நீயா

பேச்சுக்கு உயிர் தந்த

சப்தங்கள் நீயா

எனை பேசாமல் செய்கின்ற

மௌனங்கள் நீயா

பெண் : சத்தங்கள் இல்லாத

சங்கீதம் நீயா

எனை சாகாமல் செய்கின்ற

சஞ்சீவி நீயா

பருவத்தின் தோட்டத்தில்

முதற்பூவும் நீயா

என் பாலைவனம் காண்கின்ற

முதல் மழையும் நீயா

ஆண் : இரவோடு நான் காணும்

ஒளிவட்டம் நீதான்

என் இருகண்ணில் தெரிகின்ற

ஒரு காட்சி நீதான்

ஆண் : வார்த்தைக்குள் ஊடாடும்

உள் அர்த்தம் நீதான்

என் வாத்தியத்தில் இசையாகும்

உயிர்மூச்சும் நீதான்

ஆண் : தூரத்தில் மயிலிறகால்

தொட்டவளும் நீதான்

என் பக்கத்தில் அக்கினியாய்ச்

சுட்டவளும் நீதான்

ஆண் : காதலுக்கு கண்திறந்து

வைத்தவளும் நீதான்

நான் காதலித்தால் கண்மூடிக்

கொண்டவளும் நீதான்

Song information

Singers: Prabhu and Sreeja

Music by: A. R. Rahman

Release information: From Duet (1994) · Lyricist: Vairamuthu

Explore this song