Roman script

Singer : Vani Jairam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Kaveri nagarinil kadarkarai oraththil

Madhavi aada vanthaal

Oru mannavan kooda vanthaan

Avar pooviri manjaththil porunthiya pinnae

Kannagi vaazhavanthaal adhaiyum

Madhavi kaana vanthaal

Female Part

Kaveri nagarinil kadarkarai oraththil

Madhavi aada vanthaal

Oru mannavan kooda vanthaan

Female Part

Thiruvum manamum saernthathuthaanae

Thirumanam endruraippaar

Angu thiru veraagavum manam veraagavum

Iruvarum thanithirunthaar

Female Part

Maalai aninthavar sooriyan polae

Kaaigindra gunamum ndu

Aanaal mayakkaththil vanthaval venmathi polae

Manathinil kulirvathundu

Manathinil kulirvathundu

Female Part

Kaveri nagarinil kadarkarai oraththil

Madhavi aada vanthaal

Oru mannavan kooda vanthaan

Female Part

Naadakaththil varum manamakkal ellaam

Nallisai payilvathundu

Antha naadagam mudinthu thiraiyum vizhunthaal

Iruvarum pirivathundu

Female Part

Aayirangkaalaththu thendralai polae

Vaazhiya kulamagalae unnai

Aruginil irunthu paarththu kondriruppaal

Azhagiya kalaimagalae…..azhagiya kalaimagalae

Female Part

Kaveri nagarinil kadarkarai oraththil

Madhavi aada vanthaal

Oru mannavan kooda vanthaan

Avar pooviri manjaththil porunthiya pinnae

Kannagi vaazhavanthaal adhaiyum

Madhavi kaana vanthaal

Madhavi kaana vanthaal

தமிழ்

பாடகி : வாணி ஜெய்ராம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்

மாதவி ஆட வந்தாள்

ஒரு மன்னவன் கூட வந்தான்

அவர் பூவிரி மஞ்சத்தில் பொருந்திய பின்னே

கண்ணகி வாழவந்தாள் அதையும்

மாதவி காண வந்தாள்.......

பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்

மாதவி ஆட வந்தாள்

ஒரு மன்னவன் கூட வந்தான்

பெண் : திருவும் மணமும் சேர்ந்ததுதானே

திருமணம் என்றுரைப்பார்

அங்கு திரு வேறாகவும் மனம் வேறாகவும்

இருவரும் தனித்திருந்தார்

பெண் : மாலை அணிந்தவர் சூரியன் போலே

காய்கின்ற குணமும் உண்டு

ஆனால் மயக்கத்தில் வந்தவள் வெண்மதி போலே

மனதினில் குளிர்வதுண்டு

மனதினில் குளிர்வதுண்டு.....

பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்

மாதவி ஆட வந்தாள்

ஒரு மன்னவன் கூட வந்தான்

பெண் : நாடகத்தில் வரும் மணமக்கள் எல்லாம்

நல்லிசை பயில்வதுண்டு

அந்த நாடகம் முடிந்து திரையும் விழுந்தால்

இருவரும் பிரிவதுண்டு

பெண் : ஆயிரங்காலத்து தென்றலை போலே

வாழிய குலமகளே உன்னை

அருகினில் இருந்து பார்த்துக் கொன்றிருப்பாள்

அழகிய கலைமகளே......அழகிய கலைமகளே......

பெண் : காவிரி நகரினில் கடற்கரை ஓரத்தில்

மாதவி ஆட வந்தாள்

ஒரு மன்னவன் கூட வந்தான்

அவர் பூவிரி மஞ்சத்தில் பொருந்திய பின்னே

கண்ணகி வாழவந்தாள் அதையும்

மாதவி காண வந்தாள்.......

மாதவி காண வந்தாள்.......

Song information

Singer: Vani Jairam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Vaazhnthu Kattukiren (1975) · Singer: Vani Jairam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song