Roman script

Singer : Soolamangalam Rajalakshmi

Music by : V. Kumar

Lyrics by : Kannadasan

Female Part

Piththaagi thottil ondrai

Vilai koduththu vaangi vanthaen

Vaiththaatta pillai illai

Villaikku virkka yaarumillai

Female Part

Illaatha pillaikku

Naan enna solli thaalaatta

Illaatha pillaikku

Naan enna solli thaalaatta

Eththanaiyo peyar irunthum

Entha peyar naan sootta

Female Part

Illaathathondrum illai

Irunthum oru pillai illai

Pollaatha deivangal

En pulampalaiyum ketkkavillai

Female Part

Illaatha pillaikku

Naan enna solli thaalaatta

Female Part

Karikaraikkum thengaaiyai

Kaiyentha pillaiyillai

Nirai kudaththu thanneerai

Eeandralaiya pillaiyillai

Female Part

Mazhai peithor vaasalilae

Mann alaiya pillaiyillai

Maakkolam thanai azhikka

Magan ondru enakkillai

Female Part

Illaatha pillaikku

Naan enna solli thaalaatta

Female Part

Vaazhai maram kulau thalli

Vaazhntha payan thaan adaiyum…aa…

Kozhiyinam petra payan

Kunjugalaaithaan theriyum….aa….

Female Part

Paazhum maladi endra pattam pettrathandri

Yaezhai naan enna pettraen

Irul niraintha vaazhkkai ini

Female Part

Illaatha pillaikku

Naan enna solli thaalaatta

Eththanaiyo peyar irunthum

Entha peyar naan sootta

Female Part

Illaatha pillaikku

Naan enna solli thaalaatta

தமிழ்

பாடகி : சூலமங்கலம் ராஜலட்சுமி

இசையமைப்பாளர் : வி. குமார்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : பித்தாகி தொட்டில் ஒன்றை

விலை கொடுத்து வாங்கி வந்தேன்

வைத்தாட்ட பிள்ளை இல்லை

விலைக்கு விற்க யாருமில்லை........

பெண் : இல்லாத பிள்ளைக்கு

நான் என்ன சொல்லி தாலாட்ட

இல்லாத பிள்ளைக்கு

நான் என்ன சொல்லி தாலாட்ட

எத்தனையோ பெயர் இருந்தும்

எந்த பெயர் நான் சூட்ட

பெண் : இல்லாததொன்றுமில்லை

இருந்தும் ஒரு பிள்ளை இல்லை

பொல்லாத தெய்வங்கள்

என் புலம்பலையும் கேட்கவில்லை.....

பெண் : இல்லாத பிள்ளைக்கு

நான் என்ன சொல்லி தாலாட்ட

பெண் : கறிகரைக்கும் தேங்காயை

கையேந்த பிள்ளையில்லை

நிறைக் குடத்து தண்ணீரை

ஈன்றலைய பிள்ளையில்லை

பெண் : மழை பெய்தோர் வாசலிலே

மண் அலைய பிள்ளையில்லை

மாக்கோலம் தனை அழிக்க

மகன் ஒன்று எனக்கில்லை........

பெண் : இல்லாத பிள்ளைக்கு

நான் என்ன சொல்லி தாலாட்ட

எத்தனையோ பெயர் இருந்தும்

எந்த பெயர் நான் சூட்ட

பெண் : இல்லாத பிள்ளைக்கு

நான் என்ன சொல்லி தாலாட்ட

பெண் : வாழை மரம் குலைத் தள்ளி

வாழ்ந்த பயன் தான் அடையும்.....ஆ....

கோழியினம் பெற்ற பயன்

குஞ்சுகளாய்தான் திரியும்.....ஆ.....

பெண் : பாழும் மலடி என்ற பட்டம் பெற்றதன்றி

ஏழை நான் என்ன பெற்றேன்

இருள் நிறைந்த வாழ்க்கை இனி

பெண் : இல்லாத பிள்ளைக்கு

நான் என்ன சொல்லி தாலாட்ட

எத்தனையோ பெயர் இருந்தும்

எந்த பெயர் நான் சூட்ட

பெண் : இல்லாத பிள்ளைக்கு

நான் என்ன சொல்லி தாலாட்ட

Song information

Singer: Soolamangalam Rajalakshmi

Music by: V. Kumar

Lyrics by: Kannadasan

Release information: From Appa Tata (1972) · Singer: Soolamangalam Rajalakshmi · Lyricist: Kannadasan · Music: V. Kumar

Explore this song