Roman script

Singer : P. S. Ramachandran

Music by : M. S. Viswanathan

Lyrics by : Vaali

Male Part

En iravinilae iru nilavo

En uravinilae pudhu varavo

Sri raamanin sinthai thanil

Vaidhegithaan ennum vedham maarumo

Male Part

Oo….oo….en iravinilae iru nilavo

En uravinilae pudhu varavo

Sriraamanin sinthai thanil

Vaidhegithaan ennum vedham maarumo

Male Part

Nee eendreduththaai ennai sumanthu

Nalla nayaganai andru mananthu

Naan illai endraal enna aagum

Ingu innoru thaai varakkoodum

Male Part

Penn paavam endrum polaathu

Adhu veror pennaal theeraathu

Penn paavam endrum polaathu

Adhu veror pennaal theeraathu

Male Part

Oraayiram ennangalai

Yaaroduthaan ingu naanum solvatho

Male Part

Oo….oo….en iravinilae iru nilavo

En uravinilae pudhu varavo…..oo…..

Male Part

Orr needhipath endru irukkum

Ungal theerppilumaa intha kuzhappam

Naan ketpathellaam oru kelvi

Ungal needhikkum varumo tholvi

Male Part

Ellorukkum koorum niyaayangal

Adhu ingillai yaeno sollungal

Ellorukkum koorum niyaayangal

Adhu ingillai yaeno sollungal

Male Part

Oo….oo….en iravinilae iru nilavo

En uravinilae pudhu varavo…..oo…..

Male Part

Nee ullaththinaal siru kuzhanthai

Un vaarththaikalo oru mazhalai

Naan thaangi kolven unnai madiyil

En thaaraththaiyae pillai vadivil

Male Part

Yaezhaezhu jenmam endraalum

En jeevan neeyae ennaalum

Yaezhaezhu jenmam endraalum

En jeevan neeyae ennaalum

Male Part

Neer maaralaam nilam maaralaam

Yaar maarinum intha pantham maarumo

தமிழ்

பாடகர் : பி. எஸ். ராமசந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : வாலி

ஆண் : என் இரவினிலே இரு நிலவோ

என் உறவினிலே புது வரவோ

ஸ்ரீ ராமனின் சிந்தைதனில்

வைதேகிதான் என்னும் வேதம் மாறுமோ

ஆண் : ஓ.....ஓ......என் இரவினிலே இரு நிலவோ

என் உறவினிலே புது வரவோ

ஸ்ரீராமனின் சிந்தைதனில்

வைதேகிதான் என்னும் வேதம் மாறுமோ

ஆண் : நீ ஈன்றெடுத்தாய் என்னை சுமந்து

நல்ல நாயகனை அன்று மணந்து

நான் இல்லை என்றால் என்ன ஆகும்

இங்கு இன்னொரு தாய் வரக்கூடும்

ஆண் : பெண் பாவம் என்றும் பொல்லாது

அது வேறோர் பெண்ணால் தீராது

பெண் பாவம் என்றும் பொல்லாது

அது வேறோர் பெண்ணால் தீராது

ஆண் : ஓராயிரம் எண்ணங்களை

யாரோடுதான் இங்கு நானும் சொல்வதோ....

ஆண் : ஓ......ஓ.......என் இரவினிலே இரு நிலவோ

என் உறவினிலே புது வரவோ......ஓ.......

ஆண் : ஓர் நீதிபதி என்று இருக்கும்

உங்கள் தீர்ப்பிலுமா இந்த குழப்பம்

நான் கேட்பதெல்லாம் ஒரு கேள்வி

உங்கள் நீதிக்கும் வருமோ தோல்வி

ஆண் : எல்லோர்க்கும் கூறும் நியாயங்கள்

அது இங்கில்லை ஏனோ சொல்லுங்கள்

எல்லோர்க்கும் கூறும் நியாயங்கள்

அது இங்கில்லை ஏனோ சொல்லுங்கள்

ஆண் : எண்ணங்களின் வண்ணப்படி

எந்நாளுமே உங்கள் சட்டம் மாறுமோ...

ஆண் : ஓ......ஓ.......என் இரவினிலே இரு நிலவோ

என் உறவினிலே புது வரவோ......ஓ.......

ஆண் : நீ உள்ளத்தினால் சிறு குழந்தை

உன் வார்த்தைகளே ஒரு மழலை

நான் தாங்கிக் கொள்வேன் உன்னை மடியில்

என் தாரத்தையே பிள்ளை வடிவில்

ஆண் : ஏழேழு ஜென்மம் என்றாலும்

என் ஜீவன் நீயே எந்நாளும்

ஏழேழு ஜென்மம் என்றாலும்

என் ஜீவன் நீயே எந்நாளும்

ஆண் : நீர் மாறலாம் நிலம் மாறலாம்

யார் மாறினும் இந்த பந்தம் மாறுமோ

Song information

Singer: P. S. Ramachandran

Music by: M. S. Viswanathan

Lyrics by: Vaali

Release information: From Kanmani Poonga (1982) · Singer: P. S. Ramachandran · Lyricist: Vaali · Music: M. S. Viswanathan

Explore this song