Roman script

Singers : P. Susheela and P. Jayachandran

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Female Part

Anthi varum neraththilae

Anju vanna poo eduththu

Naalthorum ambu vidum manma

Unnai yaaraenum kandathundo manmatha raja

Female Part

Anthi varum neraththilae

Anju vanna poo eduththu

Naalthorum ambu vidum manma

Unnai yaaraenum kandathundo manmatha raja

Male Part

Muthu vanna maalaiyittu

Moga vanna selai katti

Muthu vanna maalaiyittu

Moga vanna selai katti

Therottam aadi varum devathai yaaro

Intha devathaikku pennazhagu radhiyennum pero

Male Part

Muthu vanna maalaiyittu

Moga vanna selai katti

Therottam aadi varum devathai yaaro

Intha devathaikku pennazhagu radhiyennum pero

Female Part

Kannirendil unnuvathum

Kayirendai pinnuvathu

Kannirendil unnuvathum

Kayirendai pinnuvathu

Enna kalai theriyavillai

Idhai palliyilum padikkavillai

Male Part

Inba veri kolluvathum

Eerudalgal thulluvathum

Inba veri kolluvathum

Eerudalgal thulluvathum

Enna sugam puriyavillai

Entha yaedum idhai vilakkavillai

Female Part

Paavai enthan ullam

Pothum pothumennum

Male : Bodhaiyerum kangal

Thevai thevaiyennum

Mouna mozhi kettaenadi

Adhil maaya valai paarthenadi

Female Part

Gangai mudi sangaranaar

Kaaman unai yaevi vittar

Mogamennum thuyar koduththaar

Muppuram pola unai eriththaar

Male Part

Aada vantha sangaranai

Aatti vaiththa manmathanai

Bhoomithanil azhipathundo

Nyanigalum jeyipathundo

Female Part

Yaagam yogam endru koorum yaavum ingu

Male : Kaamam mogam kandu maarum maarum Endru

Ethanaiyo saatchiyundu

Visuvaamithiranin kadhaiyundu

Female Part

Anthi varum neraththilae

Anju vanna poo eduththu

Naalthorum ambu vidum manma

Unnai yaaraenum kandathundo manmatha raja

Manmatha raja manmatha raja

தமிழ்

பாடகர்கள் : பி. சுஷீலா மற்றும் பி. ஜெயச்சந்திரன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

பெண் : அந்தி வரும் நேரத்திலே

அஞ்சு வண்ண பூ எடுத்து

நாள் தோறும் அம்பு விடும் மன்மத ராஜா

உன்னை யாரேனும் கண்டதுண்டோ மன்மத ராஜா.....

பெண் : அந்தி வரும் நேரத்திலே

அஞ்சு வண்ண பூ எடுத்து

நாள் தோறும் அம்பு விடும் மன்மத ராஜா

உன்னை யாரேனும் கண்டதுண்டோ மன்மத ராஜா.....

ஆண் : முத்து வண்ண மாலையிட்டு

மோக வண்ண சேலைக் கட்டி

முத்து வண்ண மாலையிட்டு

மோக வண்ண சேலைக் கட்டி

தேராட்டம் ஆடி வரும் தேவதை யாரோ

இந்த தேவதைக்கு பெண்ணழகு ரதியென்னும் பேரோ....

ஆண் : முத்து வண்ண மாலையிட்டு

மோக வண்ண சேலைக் கட்டி

தேராட்டம் ஆடி வரும் தேவதை யாரோ

இந்த தேவதைக்கு பெண்ணழகு ரதியென்னும் பேரோ....

பெண் : கண்ணிரெண்டில் உண்ணுவதும்

கையிரெண்டை பின்னுவதும்

கண்ணிரெண்டில் உண்ணுவதும்

கையிரெண்டை பின்னுவதும்

என்ன கலை தெரியவில்லை

இதை பள்ளியிலும் படிக்கவில்லை

ஆண் : இன்ப வெறி கொள்ளுவதும்

ஈருடல்கள் துள்ளுவதும்

இன்ப வெறி கொள்ளுவதும்

ஈருடல்கள் துள்ளுவதும்

என்ன சுகம் புரியவில்லை

எந்த ஏடும் இதை விளக்கவில்லை

பெண் : பாவை எந்தன் உள்ளம்

போதும் போதுமென்னும்

ஆண் : போதையேறும் கண்கள்

தேவை தேவையென்னும்

மௌன மொழிக் கேட்டேனடி

அதில் மாய வலை பார்த்தேனடி.....

பெண் : கங்கை முடி சங்கரனார்

காமன் உனை ஏவி விட்டார்

மோகமெனும் துயர் கொடுத்தார்

முப்புரம் போல உனை எரித்தார்

ஆண் : ஆட வந்த சங்கரனை

ஆட்டி வைத்த மன்மதனை

பூமிதனில் அழிப்பதுண்டோ

ஞானிகளும் ஜெயிப்பதுண்டோ

பெண் : யாகம் யோகம் என்று கூறும் யாவும் இங்கு

ஆண் : காமம் மோகம் கண்டு மாறும் மாறும் என்று

எத்தனையோ சாட்சியுண்டு

விச்வாமித்ரனின் கதையுண்டு.....

பெண் : அந்தி வரும் நேரத்திலே

அஞ்சு வண்ண பூ எடுத்து

நாள் தோறும் அம்பு விடும் மன்மத ராஜா உன்னை

யாரேனும் கண்டதுண்டோ மன்மத ராஜா

மன்மத ராஜா மன்மத ராஜா

Song information

Singers: P. Susheela and P. Jayachandran

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Nee Vazha Vendum (1977) · Singer: P. Susheela and P. Jayachandran · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song