Roman script

Singer : S. P. Balasubramanyam

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Aasai povathu vinnilae

Kaalgal povathu mannilae

Aasai povathu vinnilae

Kaalgal povathu mannilae

Male Part

Paalam podungal yaaravathu

Paadi aadungal indraavathu

Paalam podungal yaaravathu

Paadi aadungal indraavathu

Male Part

Ingu kaangindra sorkangal

Irandil ondraana varkkangal

Ingu kaangindra sorkangal

Irandil ondraana varkkangal

Sattam illaatha sangangal

Dharmam paaraatha thangangal

Male Part

Kattidam jolikkirathu

Asthivaaram azhugirathu

Male Part

Aasai povathu vinnilae

Kaalgal povathu mannilae

Male Part

Yaarum sinthattum kanneerai

Neengal theliyungal panneerai

Yaarum sinthattum kanneerai

Neengal theliyungal panneerai

Irutil eppothum inbangal

Velichcham vanthaalthaan thunbangal

Male Part

Inbangal thoonguvathillai

Thunbangaloom appadithaaan

Male Part

Paththu pathinondru pannirendu

Sothu pala kodi namakkundu

Pattra vaiyungal ippothu

Paavam santhippathu eppothu

Male Part

Uzhuuthavargal vaadugiraargal

Aruthavargal aadugiraargal

Male Part

Aasai povathu vinnilae

Kaalgal povathu mannilae

Paalam podungal yaaravathu

Paadi aadungal indraavathu

Male Part

Deivam sila neram sinthikkum

Mannil palaperai mannikkum

Deivam sila neram sinthikkum

Mannil palaperai mannikkum

Male Part

Intha mandrathil aadungal

Antha mannippai koorungal

Iraivaa….aa….aa…

Ennai manniththuvidu…

தமிழ்

பாடகர் : எஸ். பி. பாலசுப்ரமணியம்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஆசை போவது விண்ணிலே

கால்கள் போவது மண்ணிலே

ஆசை போவது விண்ணிலே

கால்கள் போவது மண்ணிலே

ஆண் : பாலம் போடுங்கள் யாராவது

பாடி ஆடுங்கள் இன்றாவது

பாலம் போடுங்கள் யாராவது

பாடி ஆடுங்கள் இன்றாவது

ஆண் : இங்கு காண்கின்ற சொர்க்கங்கள்

இரண்டில் ஒன்றான வர்க்கங்கள்

இங்கு காண்கின்ற சொர்க்கங்கள்

இரண்டில் ஒன்றான வர்க்கங்கள்

சட்டம் இல்லாத சங்கங்கள்

தர்மம் பாராத தங்கங்கள்

ஆண் : கட்டிடம் ஜொலிக்கிறது

அஸ்திவாரம் அழுகிறது....

ஆண் : ஆசை போவது விண்ணிலே

கால்கள் போவது மண்ணிலே

ஆண் : யாரும் சிந்தட்டும் கண்ணீரை

நீங்கள் தெளியுங்கள் பன்னீரை

யாரும் சிந்தட்டும் கண்ணீரை

நீங்கள் தெளியுங்கள் பன்னீரை

இருட்டில் எப்போதும் இன்பங்கள்

வெளிச்சம் வந்தால்தான் துன்பங்கள்

ஆண் : இன்பங்கள் தூங்குவதில்லை

துன்பங்களூம் அப்படித்தான்

ஆண் : பத்து பதினொன்று பன்னிரண்டு

சொத்து பல கோடி நமக்குண்டு

பற்ற வையுங்கள் இப்போது

பாவம் சந்திப்பது எப்போது

ஆண் : உழுதவர்கள் வாடுகிறார்கள்

அறுத்தவர்கள் ஆடுகிறார்கள்

ஆண் : ஆசை போவது விண்ணிலே

கால்கள் போவது மண்ணிலே

பாலம் போடுங்கள் யாராவது

பாடி ஆடுங்கள் இன்றாவது

ஆண் : தெய்வம் சில நேரம் சிந்திக்கும்

மண்ணில் பலபேரை மன்னிக்கும்

தெய்வம் சில நேரம் சிந்திக்கும்

மண்ணில் பலபேரை மன்னிக்கும்

ஆண் : இந்த மன்றத்தில் ஆடுங்கள்

அந்த மன்னிப்பை கூறுங்கள்

இறைவா ஆஆ….

என்னை மன்னித்துவிடு.......

Song information

Singer: S. P. Balasubramanyam

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Naam Pirandha Mann (1977) · Singer: S. P. Balasubrahmanyam · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song