Roman script

Singer : Seerkazhi Govindarajan

Music by : M. S. Viswanathan

Lyrics by : Kannadasan

Male Part

Aalayamendraal aalayam

Adhuthaan periyapaalaiyam

Aalayamendraal aalayam

Adhuthaan periyapaalaiyam

Male Part

Kaalam vazhangum thunbaththai ellaam

Kanavaai maattum aalayam

Kaalam vazhangum thunbaththai ellaam

Kanavaai maattum aalayam

Male Part

Aalayamendraal aalayam

Adhuthaan periyapaalaiyam

Male Part

Saalai vazhiyae thaniyae sendraal

Thaanum varuvaal bhavaaniyae

Thaayae saranam endru vizhunthaala

Than kai koduppaal bhavaaniyae

Thaayae saranam endru vizhunthaala

Than kai koduppaal bhavaaniyae….

Male Part

Kaalaiyil manjal neeril moozhgi

Kaarigamaargal koodugindraar

Kattiya veppan selaigaludane

Kaaliyin perumai paadugindraar

Kattiya veppan selaigaludane

Kaaliyin perumai paadugindraar….

Male Part

Kaali thirisoozhi

Chorus : Kaali thirisoozhi

Male : Neeli jeganmadha

Chorus : Neeli jeganmadha

Male : Devi parasakthi

Chorus : Devi parasakthi

Male : Om sakthi bavani

Chorus : Bavani bavani

Male Part

Aalayamendraal aalayam

Adhuthaan periyapaalaiyam

Male Part

Thaliyai kaatti veliyai ninainthu

Thammai maranthae aadigindraar

Dharmam enbathai kaanathavargal

Sannithi muzhuvathum thedungindraar

Male Part

Paalaiyaththammaa iruppathai maranthu

Paavigal ellaam aadugindraar

Patta pagalil kangalai izhanthu

Paadhaiyai maattri odugindraar

Male Part

Thavaru nadanthaal paalaiyaththammaa

Sakthiyai angae kaattugindraal

Dharmam vellum enbathai solli

Thaayin perumaiyai naattugindraal…

தமிழ்

பாடகர் : சீர்காழி கோவிந்தராஜன்

இசையமைப்பாளர் : எம். எஸ். விஸ்வநாதன்

பாடலாசிரியர் : கண்ணதாசன்

ஆண் : ஆலயமென்றால் ஆலயம்

அதுதான் பெரியபாளையம்

ஆலயமென்றால் ஆலயம்

அதுதான் பெரியபாளையம்

ஆண் : காலம் வழங்கும் துன்பத்தை எல்லாம்

கனவாய் மாற்றும் ஆலயம்......

காலம் வழங்கும் துன்பத்தை எல்லாம்

கனவாய் மாற்றும் ஆலயம்......

ஆண் : ஆலயமென்றால் ஆலயம்

அதுதான் பெரியபாளையம்

ஆண் : சாலை வழியே தனியே சென்றால்

தானும் வருவாள் பவானியே

தாயே சரணம் என்று விழுந்தால்

தன் கை கொடுப்பாள் பவானியே...

தாயே சரணம் என்று விழுந்தால்

தன் கை கொடுப்பாள் பவானியே...

ஆண் : காலையில் மஞ்சள் நீரில் மூழ்கி

காரிகைமார்கள் கூடுகின்றார்

கட்டிய வேப்பஞ் சேலைகளுடனே

காளியின் பெருமை பாடுகின்றார்.....

கட்டிய வேப்பஞ் சேலைகளுடனே

காளியின் பெருமை பாடுகின்றார்.....

ஆண் : காளி திரிசூலி

குழு : காளி திரிசூலி

ஆண் : நீலி ஜெகன்மாதா

குழு : நீலி ஜெகன்மாதா

ஆண் : தேவி பராசக்தி

குழு : தேவி பராசக்தி

ஆண் : ஓம் சக்தி பவானி

குழு : பவானி பவானி

ஆண் : ஆலயமென்றால் ஆலயம்

அதுதான் பெரியபாளையம்

ஆண் : தாலியைக் காட்டி வேலியை நினைந்து

தம்மை மறந்தே ஆடிகின்றார்

தர்மம் என்பதை காணாதவர்கள்

சன்னிதி முழுவதும் தேடுகின்றார்....

ஆண் : பாளையத்தம்மா இருப்பதை மறந்து

பாவிகள் எல்லாம் ஆடுகின்றார்

பட்டப் பகலில் கண்களை இழந்து

பாதையை மாற்றி ஓடுகின்றார்

ஆண் : தவறு நடந்தால் பாளையத்தம்மா

சக்தியை அங்கே காட்டுகின்றாள்

தர்மம் வெல்லும் என்பதைச் சொல்லி

தாயின் பெருமையை நாட்டுகின்றாள்...

Song information

Singer: Seerkazhi Govindarajan

Music by: M. S. Viswanathan

Lyrics by: Kannadasan

Release information: From Devi Dharisanam (1980) · Singer: Seerkazhi Govindarajan · Lyricist: Kannadasan · Music: M. S. Viswanathan

Explore this song